ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில் நிற்க விரும்பினார், அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனால், அவருக்கு சென்னையில் தொகுதி ஒதுக்க, திட்டம் போட்டிருக்கிறது, கமலாலயம். கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது. ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுவார் என்று கூறப்படும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க, குஷ்பு சம்மதம் சொல்லி விட்டார். இதனால் மிரண்டு, உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஓடினால், அங்கே, ‘செக்’ வைக்க, நடிகை காயத்ரி ரகுராமை ரெடியாக இருக்க சொல்லி விட்டது மேலிடம். ஹிந்து எதிர்ப்பு கொள்கையை கைவிட மறுக்கும், தி.மு.க.,வை பிரதான எதிரியாக பா.ஜ., கருதுவதால், அக்கட்சிக்கு எதிராக ஹிந்து ஓட்டுகளை ஒருமுனைப் படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. ‘அந்த…

Read More

திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

மர்மங்களுக்கு புகழ்பெற்றது, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் குடும்பம். நடுவில் திடீரென காணாமல் போன கிம் ஜாங், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக, கிம் ஜாங் மனைவி ரி சோல் ஜூ, எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நலக் குறைவு என, பல வதந்திகள் வெளியாயின.கடந்த, 2009ல், கிம் ஜாங் மற்றும் ஜூ திருமணம் நடந்தது. கடந்த, 2011ல், நாட்டின் தலைமை பொறுப்பை கிம் ஜாங் ஏற்ற பிறகே, ஜூ குறித்த செய்திகள் வெளியாகத் துவங்கின. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில்,…

Read More

ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வராமல் குறைந்து அதிகரிக்கிறது, அதிகரித்து பின்னர் குறைகிறது. அவ்வைரஸின் உருவத்தை போலவே இதுவும் ஒரு வட்ட வடிவ செயல்முறையாக தொடர்கிறது. பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இதுபோன்று போக்கு காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாட்டிலேயே அதிக பாதிப்புகளை கண்ட மஹாராஷ்டிராவில் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பல மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் பிப்ரவரி 28 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு கணிசமாக ஏற்றம் கண்டது. இது…

Read More

தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும், ஒரே முஸ்லிம் தலைவர், தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம் தான். அவருக்கும் எவ்வளவு இடைஞ்சல் வருகிறது. ‘முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி, பா.ஜ., என, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்ட பொய் பிரசாரம் நடத்தப்படுகிறது. ‘கொரோனா’ தடுப்பு மருந்தை, வங்க தேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு, மோடி அரசு அனுப்பி வருகிறது. முஸ்லிம் விரோத அரசு என்றால் இப்படி செய்யுமா?’ என, கேள்வி எழுப்பியிருக்கிறார்.மோடி அரசு, இதுவரை சிறுபான்மையினருக்கு எதிராக என்ன செய்து இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அப்படியிருந்தும் ஏன், அக்கட்சி மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்,…

Read More

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !!

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !!

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜையை கண்டு மகிழுங்கள் !! இன்று சூரிய பகவானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன !! இந்த ரத்த சப்தமி அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வரும். உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் வெற்றி, அமைதி மற்றும் செல்வ செழிப்பு கிட்டவும் மற்றும் உலக நலனுக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றதை வீடியோவில் கண்டு பக்தி வயப்படுங்கள் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில்…

Read More

நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள் தேர்தல் பயத்தால் வேல் துாக்குகின்றனர்

நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள் தேர்தல் பயத்தால் வேல் துாக்குகின்றனர்

தமிழகத்தில், நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள், இன்று தேர்தல் பயத்தால், வேல் துாக்குகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று நடந்தது. மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வணிகர்கள், தொழிலதிபர்கள் பட்ஜெட்டின் சிறப்புகள் பற்றியும், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினர். அதே சமயம், தமிழக தொழில்கள் வளர்ச்சியடைய, மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் முறையிட்டனர். பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட கிடையாது. ஆனால், நாட்டில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும்…

Read More

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37). டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் லீட்சில் நடந்த 4வது நாள் ஆட்டத்தில், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி தொடரை வெல்ல பிரசாத் உதவினார். இதனை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் பெருமையுடன் கூறியுள்ளார். இதேபோன்று பிரசாத் பற்றி முன்னாள் கேப்டன் அட்டப்பட்டுவும் புகழ்ந்து கூறியுள்ளார். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்து கொண்டு பந்து வீச்சை…

Read More

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் !!

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் !!

நாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். உத்தர பிரதேசத்தில், இந்த சம்பவம் நடக்கவுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது, அடையாளம் தெரியாத சிலர், வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக, தெரிவித்தார். போலீசார் தீவிரமாக விசாரித்த…

Read More

தி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் !! கனிமொழியின் ‘செட்டப்’ நாடகம் அம்பலம் !!

தி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் !!  கனிமொழியின்   ‘செட்டப்’ நாடகம் அம்பலம் !!

தர்மபுரி அருகே, ஏரியூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் ஒருவரை பேச செய்து, ஓட்டு வங்கியை தக்க வைக்க, தி.மு.க., நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில், நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். தி.மு.க., ஆலோசனை நிறுவனமான, ‘ஐபேக்’ அமைத்து கொடுத்த அரங்கில், அவர்களால் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, தி.மு.க., கொடி பொறித்த தொப்பி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட பெயர்களை சொல்லி அழைக்க, அவர்கள் கேள்வி கேட்க, கனிமொழி பதில் கூறினார். நிகழ்ச்சி முடிய, கடைசி ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்த, ஏரியூர்,…

Read More

ஜப்பான் நீர் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள் !!

ஜப்பான் நீர் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள் !!

கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த தீவை டயோயுடாவ் தீவுகள் என்று அழைக்கும் சீனா, 1783 மற்றும் 1785-ம் ஆண்டுகளில் ஜப்பானிய வரைபடங்களில் இந்த தீவுகள் சீனா பிரதேசமாக குறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பான் அதனை சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் கூறி வருகிறது. அதேசமயம் 1895-ம் ஆண்டு முதல் இந்த தீவின் மீது தங்கள் நாடு இறையாண்மையை கொண்டுள்ளதாக ஜப்பான் வாதிடுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. செங்காகு தீவை கைப்பற்றுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானுக்கு சொந்தமான அந்த தீவுக்குள் சீனாவின்…

Read More
1 101 102 103 104 105 256