இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்

இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரனின் கருத்து நேற்றைய தினம் (20) அமைந்திருந்தது. “இலங்கை நாடானது தமிழர் பூமி” எனவும், “இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்” எனவும், “தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி” எனவும் விக்னேஷ்வரன் நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார். இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று (21) தெரிவித்துள்ளார். தமிழர்களின் சுயவுரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தில்…

Read More

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 75 கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ‘எக்மோ’ போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் அவருக்கு தேவைப்படுகிறது. செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை…

Read More

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா  ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழின் தலைநகராக மதுரையை அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும். மதுரை தமிழ் அன்னையின் பூமி. சங்கம் வளர்த்து தமிழ்கண்ட பூமி. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போதிய வளர்ச்சி இல்லை. 60 ஆண்டுகளாக தமிழின் பெயரை சொல்லி ஆட்சிபுரிந்துள்ளனர். மதுரைக்கு, தமிழுக்கு என்ன பெருமை கிடைத்துள்ளது.ஜெ., முதல்வராக இருந்தபோது மதுரையில் பிரமாண்டமான தமிழன்னை சிலை அமைக்க வேண்டும் என்றார். ஜெ.,யின் கனவை நிறைவேற்ற, தற்போதைய அரசு மதுரையில்தமிழன்னை…

Read More

ஆஸி.,யில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பிரதமர் அறிவிப்பு

ஆஸி.,யில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் ஆஸி அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆஸியில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில்…

Read More

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக…

Read More

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி தானம் !!

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி தானம் !!

அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பருவமழை காரணமாக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாமில் 28 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இதுவரை வெள்ளத்திற்கு 128 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால்,தனது டுவிட்டரில் கூறியது, அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, அக்ஷய் குமார் தனது பங்களிப்பாக, ரூ. 1 கோடி வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள்….

Read More

மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம் எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம்  எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

பிஷ்ணுபூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. சௌமித்ரா கான் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். பிராமண பண்டிதர்கள் மேற்கொண்ட சடங்கின் போது முஸ்லிம் எம்.பி. ​​கான் மொட்டையடித்து ஹோமம் செய்து குடும்பத்துடன் பிரதித்தார். ஸ்ரீ கான் காவி உடையணிந்து அணிந்து சடங்கு செய்தார். விழா முடிந்த உடனேயே, அடுத்த ஆண்டு காவி ஆடைகளை மட்டுமே அணிவேன் என்று அறிவித்தார் – “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சி அரசை எதிர்த்து மக்கள் வாக்களித்து தூக்கியெறியும்வரை காவி உடை மட்டுமே அனிவேன் ” என்று பகிரங்க பிரகடனம் செய்தார். இன்று கான் காட்டிய வழியில் மேலும் பல முஸ்லிம்கல் மேற்கு வங்கத்தில் தாய் மதம் திரும்புவர் என்று…

Read More

கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த புனித தினத்தை முன்னின்ட்டு நமது “பசுமை விநாயகர்” போட்டியை நாம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்த போட்டியில் வெற்றிபெற நீங்கள் ஒரு சூழல் நட்புடய பிள்ளையாரை உருவாக்க வேண்டும். இந்த பிள்ளையார் செய்யும்போது படிப்படியாக புகைப்படங்கள் / வீடியோவை எடுத்து நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் .. நீங்களே உருவாக்கிய இந்த அன்பு விநாயகரிடம், உங்கள் சொந்த விநாயகரிடம் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வதும் அடங்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புங்கள். வெற்றிபெறுவோர் பாரத் மார்க் சான்றளிக்கப்பட்ட “கணேஷ் சிற்பி” அறிவிக்கப்படுவார்கள். உங்கள் திறமையைக் காட்டவும் நிரூபிக்கவும் இந்த அற்புதமான போட்டியில் பங்கேற்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்: 1)…

Read More

ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஆன்மிக அரசியல் விவகாரத்தால், ‘ஐபேக்’ நிறுவனத்திற்கும், தி.மு.க., – ஐ.டி., அணிக்கும் இடையே, உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில், தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. அப்போது, தி.மு.க., – எம்.பி., ஒருவர், ‘அ.தி.மு.க., – பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இணையாக, தி.மு.க., – ஐ.டி., அணியின் செயல்பாடு இல்லை’ என, குற்றம் சாட்டினார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘ஐ.டி., அணி சிறப்பாக செயல்படுகிறது’ என, பாராட்டினார். ஐ.டி., அணி மாநில செயலராக, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் செயல்படுகிறார். தியாகராஜனின் குடும்பம், பாரம்பரியமாக ஆன்மிக ஈடுபாடுள்ளது என்பதால்,…

Read More

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா ஜ க வில் இணைகிறாரா? தி.மு.க திக்…திக் ….திக் !!

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா ஜ க வில் இணைகிறாரா?  தி.மு.க திக்…திக் ….திக் !!

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தில்லியில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவின் தலைமையகத்தில் நடந்த விழாவிலும் கு.க. செல்வம் கலந்துகொண்டார். ஆனால், தான் பா.ஜ.கவில் இணையவில்லையென்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் பிறகு ஊடகங்களில் பேசிய அவர், தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு தனக்கு தரப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து கு.க. செல்வத்தை தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளைப் பறித்த தி.மு.க., அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன்…

Read More
1 122 123 124 125 126 256