சர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை
சர்வதேச புத்தமத கூட்டமைப்பு சார்பில் நாளை( 4 ம் தேதி) கொண்டாடப்பட உள்ள தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்திய அரசின் கலாசாரத்துறை தலைமையின் கீழ் சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஆசாத் பூர்ணிமா தினத்தை தர்மசக்ரா தினம் கொண்டாடப்பட உள்ளது. புத்த மதத்தவர்களும், இந்து மதத்தவர்களும் தங்களின் குருக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, மனிதர்களின் துன்பங்களை போக்க புத்தர் வழங்கிய போதனைகள் குறித்து வீடியோ மூலம் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், மற்றும் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கின்றனர்….
Read More









