தமிழ்நாடு ஆளுநரை கையாள முடியாமல் திணறுகிறதா திமுக?மாநில பாஜக நிலைப்பாடு மாறுவது ஏன்?
திராவிடம் குறித்தும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் மீண்டும் மீண்டும் இப்படிப் பேசுவது ஏன்? தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இப்போது இரு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசிய பேச்சு, மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவு தினம் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுப் பேசினார். திராவிட இயக்கம், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு…
Read More









