ஹரியும் சிவனும் ஒன்னு – இதை அறியாதவன் வாயில மண்ணு !!

ஹரியும் சிவனும் ஒன்னு – இதை அறியாதவன் வாயில மண்ணு !!

ஹரியையும் – சிவனையும் வேறென்று கூறி அரசியல் நடத்தும் வந்தேரி கூட்டங்களும் கிறிஸ்துவ மிஷனரிகளும்… இந்து விரோத மற்றும் தேச விரோத சக்திகளும் எப்படி நம்மிடம் பொய்கூறி பிழைப்பு நடத்துகிறது என்பதை அறியவும் … சனாதன தர்மத்தின் உண்மையை அறியவும் இந்த வீடியோவை கிளிக் செய்து பார்த்து… கமெண்ட் செய்து.. அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும்…

Read More

தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் – பிபிசி தமிழ் கள நிலவரம்

தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் – பிபிசி தமிழ் கள நிலவரம்

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்கள் கொலை மட்டுமின்றி ஷாஃபி மேலும் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எலந்தூர் மக்களிடையே நிலவுகிறது. அங்குள்ள கள நிலவரத்தை வழங்குகிறது பிபிசி தமிழ். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பகவல் சிங்கின் வீடருகே நாம் முதலில் சந்தித்த பெயர் வெளியிட விரும்பாத திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்மணி தாமும் மாந்திரீகரான ஷாஃபியின் வலையில் சிக்கவிருந்ததாகவும் அதில் இருந்து கடைசியில் மீண்டதாகவும் கூறினார். “முதலில் ஷாஃபியின் வேண்டுகோளுக்கிணங்க சென்றிருக்க வேண்டியது நான் தான். என்னிடம் ஒரு…

Read More

ஆங் சான் சூகிக்கு தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றம்

ஆங் சான் சூகிக்கு தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றம்

மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, மோசடி வழக்கு ஒன்றில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூகி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்பின் ஆங் சான் சூகி வீட்டுக்…

Read More

அமெரிக்காவிடம் கேட்கிறார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர்

அமெரிக்காவிடம் கேட்கிறார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர்

இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்காவில் தாமதம் ஏற்படுவதாகவும் , இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கா சென்ற அவர் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; என்னுடைய அமெரிக்க பயணம் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியா -அமெரிக்க உறவு உலகம் தழுவிய மாற்றத்தை ஏற்படுத்தும். இரு நாட்டு உறவு மிக முக்கியமானதாகும். அமெரிக்க விசா நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும், பல இந்திய மாணவர்கள் அமெரிக்க விசா கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு…

Read More

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் இன்று இரவு புதுடில்லி திரும்பினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு இன்று (செப்.,27) நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.02) ஜப்பான் சென்றார். அங்கு நடந்த இறுதி சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.பின்னர் பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்தித்தார். ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு இன்று நள்ளிரவில் புதுடில்லி திரும்பினார். பிரதமர் மோடி.

Read More

மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாக்.,கிற்கு 2,800 கோடி டாலர் இழப்பு

மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாக்.,கிற்கு 2,800 கோடி டாலர் இழப்பு

பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையினால் காரணமாக 1,009 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கணிப்பில் 2,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் ஜூன் மாத மத்திக்கு பிறகு, பருவநிலை மாற்றம் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளம் காரணமாக 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்நாட்டில் வறுமை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 90 லட்சம் முதல் 1.2 கோடி பேர் வரை வறுமைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை…

Read More

இந்தியா செய்தி முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

இந்தியா செய்தி  முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, ‘வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை,…

Read More

ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு

ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு

தற்போது போருக்கான காலம் அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருவரும், உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரம் தொடர்பாக விவாதித்த போது, புடினிடம் தற்போது போருக்கான காலம் இதுவல்ல என மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாவது: தற்போது போருக்கான காலம் இதுவல்ல என,…

Read More

ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்

ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்

இங்கிலாந்தில் வகுப்புவாத பதற்றம் வன்முறையாக மாறியது. இதில், அங்குள்ள ஹிந்து கோவிலில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், ஹிந்து கோவில் கட்டடத்தின் மேல் ஏறி காவி கொடியை அகற்ற முற்படுகிறார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது….

Read More

இந்தியா செய்தி புதுடில்லி முதல்வர் பயணத்துக்கு 5 ஆட்டோக்களை வழங்கியது பா.ஜ.,

இந்தியா செய்தி  புதுடில்லி முதல்வர் பயணத்துக்கு 5 ஆட்டோக்களை வழங்கியது பா.ஜ.,

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசளிக்க, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து ஆட்டோக்களுடன் முதல்வர் இல்லத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இரண்டு நாள் முகாமிட்டு, அங்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து, அந்த டிரைவர் ஆட்டோவில் கெஜ்ரிவாலை அழைத்துச் சென்றார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோவில் செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனக்கு பாதுகாப்பே தேவையில்லை என கெஜ்ரிவால் ஆவேசத் துடன் கூறினார். இதையடுத்து, ஆட்டோ டிரைவர் அருகில்…

Read More
1 56 57 58 59 60 256