பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார் – முதல்வர் இ.பி.எஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார் – முதல்வர் இ.பி.எஸ்

”பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார். நடிகர் கமல் ஓய்வு பெற்ற பின், அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் குடும்பம் கெட்டுப் போகும். அப்படிபட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிபட்ட தலைவரின்…

Read More

சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து கெஜ்ரிவால் புதிய நாடகம் !!

சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து கெஜ்ரிவால் புதிய நாடகம் !!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தான் ஆதரித்த அதே வேளாண் சட்ட நகலை முதல்வர் கெஜ்ரிவால் கிழித்து புதிய நாடகம். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், விவசாயிகளுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி மற்றும் சுகாதார பணிகளை டில்லி அரசு செய்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக விவாதிக்க டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கெஜ்ரிவால், வேளாண் சட்ட நகலை கிழித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டசபையில், வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்தேன்….

Read More

கற்பழித்தால் ஆண்மை நீக்கப்படும் – அவசர சட்டத்திற்கு பாக்., அதிபர் ஒப்புதல்

கற்பழித்தால் ஆண்மை நீக்கப்படும் – அவசர சட்டத்திற்கு பாக்., அதிபர் ஒப்புதல்

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனையடுத்து கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.   இந்நிலையில், இந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியும் ஒப்புதல்…

Read More

1971ல் பாக்.,ஐ இதேநாளில் மண்டியிட வைத்த இந்தியா !!

1971ல் பாக்.,ஐ இதேநாளில் மண்டியிட வைத்த இந்தியா !!

1971ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில், இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதை டுவிட்டரில் பல்வேறு ஹேஷ்டாக்குகளில் இந்தியர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தான்(இப்போது வங்கதேசம்) இருந்தது. இதன் விடுதலைக்காக இந்தியா ராணுவம் அப்போது உதவியது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இந்தபோரில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சரணடைந்தனர். மேலும் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக இருந்ததும் இந்தப் போர்தான். இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக…

Read More

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் – இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க சதி

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் – இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க சதி

புதுடில்லி விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, இந்திய வர்த்தக, தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தால், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பொருட்களை எடுத்துச் செல்வது தடைபடுவதால், நாட்டின் பொருளாதாரத்தில், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஜவுளி, வாகன பாகங்கள், சைக்கிள்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற துறையினர், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வெளிநாடுகளுக்கு உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாமல் போகிறது. இதனால், நம் தொழில்துறையின் மீதான நற்பெயருக்கும் பங்கம் ஏற்படுகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.அகில இந்திய வர்த்தகர்கள்…

Read More

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்

பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30 ஆயிரம் டோஸ் பைசர் பயான் டெக் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார். அனைத்து மேலைநாடுகள்போல முதலில் தடுப்பு மருந்துகள் முதல்நிலை நோய்த் தடுப்பு பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. அமெரிக்காவில் நேற்று தடுப்பு மருந்து செலுத்தும் பணி துவங்கிவிட்ட நிலையில் இன்று கனடாவில் 89 வயதான மூதாட்டி ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர். கிசேல் லெவெஸ்க் என்ற இந்த மூதாட்டிக்கு தற்போது…

Read More

யூடியூப், கூகுள் செயலிகளை முடக்க ஹேக்கிங் அட்டாக் நடந்ததா ?

யூடியூப், கூகுள் செயலிகளை முடக்க ஹேக்கிங் அட்டாக் நடந்ததா ?

பிரபல இணையதளமான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் உலகம் முழுவதும் முடங்கின. தற்போது படிப்படியாக செயலிகள் சீராக செயல்பட துவங்கின. கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல செயலிகள் உலகம் முழுவதும் திடீரென முடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் மாலை 5 மணி முதல் படிப்படியாக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சர்வர் கோளாறு காரணமாக கூகுள் நிறுவன செயலிகள் செயல்படவில்லை என தகவல் வெளியாயின இதனையடுத்து #GoogleDown #YouTubeDOWN போன்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இந்த செயலிகள் முடக்கமானது மொபைல் போனில் மட்டுமே உள்ளதாகவும், கணினிகளில் கூகுள்…

Read More

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!

உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் லண்டனில் அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுகாதாரதுறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கும் ‘கொரோனா வைரசின் புதிய மாறுபாடு’ வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பிரிட்டனின் பல்வேறு இடங்களில்…

Read More

நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மாமனாரிடம் காவல்துறையினர் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரஸ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். நடிகை சித்ராவின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. அந்த விடுதி அறையில் நடிகை சித்ராவும் அவரது கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், சம்பவ நாளில் நள்ளிரவுக்கு பிந்தைய நேரத்தில் அறைக்கு வந்த சித்ரா, தான் குளிக்கப்போவதாகக் கூறி ஹேமந்தை வெளியே இருக்கக் கூறியதாகவும் அதன் பிறகு வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், மாற்றுச் சாவியை வாங்கி அறையை…

Read More

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகள் மோதல்: 11 பேர் பலி&106 பேர் காயம்

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகள் மோதல்: 11 பேர் பலி&106 பேர் காயம்

மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.  29ம் தேதி மாலை ஆரம்பமான மோதல் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காயமடைந்த கைதிகளுக்கு ராகமை மருத்துவமனை, வெலிகட சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது. அத்துடன், சிறு காயங்களுக்கு உள்ளான கைதிகளை சிகிச்சைகளின் பின்னர், மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் கோவிட்…

Read More
1 107 108 109 110 111 425