இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது. இது இலங்கையை கடக்கும்வரை புயலாகவே காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் கூறுகிறது. வங்காள விரிகுடாவில் உருவாகும் பெருமளவிலான புயல்கள், இலங்கைக்கு அருகே மையம் கொண்டவாறு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல், இலங்கைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகே ஊடுருவி தமிழகம் நோக்கி நகருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இலங்கைக்குள் புயல் ஒன்று ஊடுருவிச் சென்றது. தற்போதைய புரெவி புயலும் அதை ஒத்ததாகவே…

Read More

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை

நைஜீரியாவில் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ்., அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்நிலையில், போர்னோ பிராந்தியம் அருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில்…

Read More

முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்

முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என அம்மாநில பா.ஜ., அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பாஜக மூத்த தலைவரும், மாநில கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளார். செய்தியாளர்களுக்கு ஈஸ்வரப்பா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பெலகாவி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம். அவர் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருப்பினும், குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி…

Read More

இலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

இலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் தடை விதித்திருந்தன. கடந்த காலங்களில் மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அரசாங்கத்தினாலும், நீதிமன்றங்களினாலும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து…

Read More

கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

மாரடோனா உடல் அடக்கம் செய்யப்பட்டது. கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனா 60. நான்கு உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்றது. 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராக செயல்பட்டார்.கடந்த அக்டோபர் மாதம் கொரோனா சோதனையில் தேறினார். இருப்பினும் மது சார்ந்த தொல்லைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த நவ. 3ம் தேதி பியுனஸ் ஏர்சின், லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துமனையில் மாராடோனா மூளையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. உறைந்திருந்த ரத்தத்தை வெற்றிகரமாக அகற்றிய பின், நவ. 11ல் வீடு திரும்பினார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது உடல் காசா ரொசாடாவில் உள்ள…

Read More

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

நியூசிலாந்தில் நடந்த எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கவுரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் எம்.பி., யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த புதனன்று அந்நாட்டு பார்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 33 வயது நிரம்பிய சர்மா நாவ்டானில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது முகநூல் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப்பருவத்திலிருந்து கற்று…

Read More

நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் – சீன அதிபர் உத்தரவு

நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும்  – சீன அதிபர் உத்தரவு

மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார். சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார். நேற்று (நவ.,25) அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜிங்பிங் பங்கேற்றார். உண்மையான போர் நிலைமையை மையமாக கொண்டு பயிற்சிகள் அமைக்கப்பட வேண்டும். போர்களை வெல்லும் திறனை அதிகரிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் நாட்டு ராணுவத்தை 2027-க்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது….

Read More

தூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் !!

தூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் !!

தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று(நவ.,25) பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே, இந்திய – இலங்கை கடலோர எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய எல்லையில் படகு ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த படகை சோதனை செய்தனர். அதில், படகில் இருந்து 30 டன் ஹெராயின், கிறிஸ்டல் மேத்தலின் போதை பொருள், 10 துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்பட்ட நிலையில் படகு பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி-…

Read More

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல்  120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல், அதி தீவிரமாக உருவெடுத்து வருகிறது. மணிக்கு, 120 முதல், 145 கி.மீ., வேகத்தில், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால், தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பஸ், ரயில்கள் போக்குவரத்து முடங்கின. மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை உட்பட பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மக்களை காக்க, தமிழக…

Read More

மதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – உ பி முதல்வர் யோகி அதிரடி

மதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – உ பி முதல்வர் யோகி அதிரடி

மதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது: திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை குற்றமாக்கும் வகையில், அவசர சட்டம் அமல்படுத்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு…

Read More
1 109 110 111 112 113 425