இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னல் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பு !!

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னல் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பு !!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும், இலங்கையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தம்மிடம் தகவல் உள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா எனவும் ஹரின் பெர்ணான்டோ சபையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சரத் வீரசேகர, ஆம் என பதில் கூறினார்.  எனினும், ரகசியங்களை தற்போதைக்கு கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலுள்ள சிலரும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை உறுதிப்படுத்த வாய்ப்பு…

Read More

இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

ஐதராபாதில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை வெளிநாடுகளின் துாதுக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர். கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் நம் நாட்டின் சில நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இவற்றில் சிலவற்றின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ளன.இந்த நிறுவனங்களின் பணிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பல்வேறு நாடுகளின் துாதர்கள் குழுவின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் விளக்கப்பட்டது.இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட துாதர்கள் குழுவினர் நேற்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்தனர். அங்கு கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களான ‘பாரத் பயோடெக்’ மற்றும் ‘பயாலஜிகல் இ’ ஆகியவற்றை…

Read More

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்டும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்டும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே, 1984ல், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நடத்திய, ‘ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் அடங்கியது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும், தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபில் மீண்டும்…

Read More

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார். இதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தேசிய செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் திங்கட்கிழமை பாஜக உறுப்பினரானார்….

Read More

தென் சீன கடல் பரப்பை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயலும் சீனா..!

தென் சீன கடல் பரப்பை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயலும் சீனா..!

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளில் ஒன்று தென் சீன கடல் பகுதி. இதில் அவ்வப்போது சீனா போர் பயிற்சியில் ஈடுபடும். மேலும் இங்கு உள்ள சீனாவுக்கு சொந்தமான சிறிய தீவுகளில் ராணுவ தளவாடங்களை அமைத்துள்ளது சீனா. 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கடற்பரப்பில் நீர்மூழ்கி போர்க் கப்பல்களையும் சீனா பயன்படுத்தி வருகிறது.   இதனால் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியாவுடன் போர் அபாயம் ஏற்பட்டு விடும் என்று அந்த நாட்டு தலைவர்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கைகளால் அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படுவது வாய்ப்பில்லை என்றும் தற்காப்புக்காகவே சீனா தென்சீனக்கடலை பயன்படுத்தி வருகிறது என்றும்…

Read More

விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதேவுக்கு இந்தியா எச்சரிக்கை !!

விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதேவுக்கு இந்தியா எச்சரிக்கை !!

டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், காலிஸ்தான் கூட்டத்தின் ஒட்டு பெற தேவையில்லாமல் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடா துாதருக்கு, வெளியுறவு அமைச்சகம், ‘சம்மன்’ அனுப்பியது. ‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், இரு நாட்டு உறவு பாதிக்கப்படும்’ என, அவரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மூன்றாவது முறையாக பேச்சு நடக்க உள்ளது. இதற்கிடையில், சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள்,…

Read More

ரஜினி முதல்வர் வேட்பாளரக தன்னை அறிவிக்கமாட்டார் – தமிழருவி மணியன்

ரஜினி முதல்வர் வேட்பாளரக தன்னை அறிவிக்கமாட்டார் – தமிழருவி மணியன்

வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ரஜினி கட்சிக்கு, அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும், அதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. நேற்று தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதன் தேதி டிச.,31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன் கூறியதாவது: ரஜினியால் மட்டுமே வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். வார்த்தை தவறாத…

Read More

‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவிக்கும், ஐ.நா., சபை, ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினர் மீதான தாக்குதலை ஏன் கண்டுகொள்வதில்லை’ என, இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஐ.நா., பொதுச் சபையில், ‘அமைதி கலாசாரம்’ என்ற பெயரில், மத ரீதியில் நடக்கும் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவின் முதன்மை செயலர், ஆஷிஷ் சர்மா பேசியதாவது:கிறிஸ்துவம், யூத, இஸ்லாமிய மதத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து, ஐ.நா., சபையில் இத்தனை ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மதத்தினர் மீதான தாக்குதலை, இந்தியாவும் கடுமையாக எதிர்க்கிறது. அதே நேரத்தில் மற்ற மதத்தினர் குறித்து, ஐ.நா., பாராமுகமாக இருந்து வருகிறது.புத்த,…

Read More

தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

ஜனவரி 1ஆம் தேதி புது கட்சி துவங்கி தமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம். சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜன., மாதம் கட்சி துவக்கப்போவதாகவும், இதற்கான தேதி டிச.,31ல் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!

கொழும்பு, கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்துள்ள கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை திடீரென அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்காக களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ்…

Read More
1 108 109 110 111 112 425