ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய்? காதலி நிர்பந்தமா ?

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய்? காதலி நிர்பந்தமா ?

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவரது காதலி அவரை பதவியிலிருந்து விலக நிர்பந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உலக அரசியலில் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பை கூட்டியுள்ள நிலையில், ரஷ்யாவிலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி, அந்நாட்டின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு மாஸ்கோவின் அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி பேட்டியளித்துள்ளார். அதில், புடின் பார்கின்சன் நோய் இருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். சமீபத்திய வீடியோ ஒன்றில் நாற்காலியை பிடித்திருக்கும் போது அவரது கால்கள் நடுங்குவது தெரிந்தது. இதனால் அவருக்கு பார்கின்சன் நோய் உள்ளது என பரவலாக பேசப்படுகிறது. அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது…

Read More

மக்கள் இயக்கமாகும் வேல் யாத்திரை !! மக்கள் போகுமிடமெல்லாம் வரவேற்பு !!

மக்கள் இயக்கமாகும் வேல் யாத்திரை !! மக்கள் போகுமிடமெல்லாம் வரவேற்பு !!

தமிழக பா.ஜ., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #துள்ளி_வருது_வேல், #VelYatra, #வெற்றிவேல்_யாத்திரை போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழக பாஜ., சார்பில் இன்று (நவ.,6) முதல் டிச.,6ம் தேதி வரையில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த யாத்திரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திட்டமிட்டபடி வேல் யாத்திரையை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருத்தணியில் தொடங்க உள்ள…

Read More

இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்?

இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்?

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஐரோப்பாவின் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை அண்மித்தே இந்த கோவிட் வைரஸ் பிரிவு பரவி வருகின்றமை, சர்வதேச தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழு குறிப்பிடுகின்றது. இந்தியாவிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட…

Read More

மதம் மாற்ற சதி செய்வர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் வருகிறது !!

மதம் மாற்ற சதி செய்வர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில்  கடுமையான சட்டம் வருகிறது !!

மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளோம். இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இச்சட்டம் இயற்றுவதற்கான நடைமுறையைத் தொடங்விட்டோம், விரைவில், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். “வெளிநாட்டு பட்டாசுகளுக்கு பதிலாக நமது நாட்டில் தயாராகும் பட்டாசுகளை மட்டுமே விற்கவும் பயன்படுத்தவும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். தெய்வங்கள் அல்லது தெய்வங்களின் படங்களுடன் பட்டாசுகளை விற்பவர் அல்லது பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கவும்…

Read More

ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

கொரோனாவின் தாக்கம் குளிர்காலத்தில் அதிகமாக இருக்ககூடும் எனவும், இதன் காரணமாக வயதானோர் மற்றும் குழந்தைகளின் சுவாசத்திற்கு பிரச்னை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை சுவாச கோளாறை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் காற்று மாசுபாடு குறித்து பட்டாசு விற்பனையை வரும் 7 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் தடை செய்வது குறித்து டில்லி, உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டது.இதில் ராஜஸ்தான் மாநிலம், மற்றும் ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் பட்டாசு விற்பனைக்குமாநில அரசு…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். எதிர்பார்க்காத மாகாணங்களில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாஸ், ஜார்ஜியாவில் வெற்றி கிடைத்துள்ளது. பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சினில் வெற்றி கிட்டும். சிறப்பான ஆதரவை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நான் வென்றுவிட்டேன். இந்த தேர்தலில், சாதனை அளவாக ஏராளமானோர் ஓட்டு போட்டனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த…

Read More

இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

இஸ்லாம் மதத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் உடைப்பு

சீனாவில் தொன்மையான பிரபல நங்குவான் மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் அகற்றப்பட்டு, இஸ்லாமிய அடையாளம் உடைக்கப்பட்டது. சீனாவின் நிங்சியா மாகாணத்தில் உள்ளது நங்வான் மசூதி. பழமையான இந்த மசூதி பிரபலமானது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இதன் கோபுரங்களும், மாடங்களும் மிக புகழ் பெற்றவை. சமீபத்தில் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இந்த மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் இடிக்கப்பட்டது. இது சீன முஸ்லிம்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளி உலகுக்கு தெரியாமல் சீன கம்யூனிஸ்ட் அரசால் செய்யப்பட்ட இந்த மாற்றம் தற்போது தான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணை அதிகாரியாக பணிபுரியும் கிறிஸ்டினா ஸ்காட் என்பவர் தான்…

Read More

‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்

‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்

பீஹாரின் சகர்சா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். இன்று பீஹாரின் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒரு மணி வாக்கில் 33% மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பாட்னாவில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்கள். இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மோடி ஈடுபட்டுள்ளார். பிற்பகல் வரை இரண்டு இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தவர், ஒவ்வொரின் வாக்கும்…

Read More

#திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது

#திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது

#திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது !! இந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசிய திருமாவளவன் மீதான கோபம் தீரவில்லை. தொடர்ந்து அவருக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது. இணையதள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற எம்பியும்., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், ”இந்து பெண்கள் எல்லோரும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என மனு தர்மாவில் கூறப்பட்டுள்ளதாக” பேசினார். இது சர்ச்சையானது. இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில் அவருக்கு எதிரான…

Read More

இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் படித்து பின்னர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்த இவர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலை.,யில் இளங்கலை பட்டமும், வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த…

Read More
1 112 113 114 115 116 425