இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி போலீஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார். ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியிருந்தார். சுமார் 6 நாட்கள் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீனை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…

Read More

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இப்படத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை எதிர்கொண்டு வென்றிருக்கிறேன். இந்தப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை படமாக்க சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போது அதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தடைகளை கடந்து இந்த…

Read More

2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம் –  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

” ௨ஜி வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி உளறுகிறார்” என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து பா.ஜ. சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசும் விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கும் அரசாக தமிழகமும் உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ. கூட்டணியில் விரிசல் இல்லை. அண்ணா பல்கலை விவகாரத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் சம்பந்தமில்லாமல் பேசுவது உளறுவது தெளிவில்லாததே அக்கட்சியின்…

Read More

ஐந்து துணை முதல்வர் பதவிகள் தி.மு.க கூட்டணிக்கு – கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி

ஐந்து துணை முதல்வர் பதவிகள் தி.மு.க கூட்டணிக்கு –  கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், தி.மு.க.,வில், துணை முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க, கூட்டணி கட்சிகள் சில திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில், யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே மோதலாக வெடித்தது.அக்கட்சி இரண்டாக பிளவுபடப் போகிறது என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., ஏகமனதாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, முரண்டு பிடித்து வந்த பா.ஜ., கட்சி, ‘மீண்டும் அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம்’ என, அறிவித்து விட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதை, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில்,…

Read More

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும்….

Read More

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில், பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திரிவேதி உள்ளிட்ட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர்(மைத்துனர்) ஆவார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியதும் ஆதித்யா ஆல்வா…

Read More

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது…

Read More

பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுர வேகத்தில் செய்து வருகிறது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கி விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர் கதையாகி வருகிறது. அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர். காங்கிரசில் இருந்த குஷ்பு,…

Read More

‛பிரைம் டே’ அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

‛பிரைம் டே’ அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக கொடிகட்டி பறக்கும் அமேசானில் சர்ச்சைகளும் எழுவதுண்டு.  தற்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொழிலாளர் யூனியன் அமேசான் ஊழியர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வலியுறுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள 7 அமேசான் குடோன்களில் பணிபுரியும் இந்த ஊழியர்களை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. இன்று அமேசான் பிரைம் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், அமேசான் நிறுவனத்துக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது. ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ‛பிரைம் டே’ தற்போது கொரோனா தாக்கம் காரணமாக கொண்டாட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனசை அமேசான் நிறுவனம் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய இந்த…

Read More

டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் !!

டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்  !!

அதிபர் டொனால்டு டிரம்ப், நன்றாக தேறிவிட்டதால், அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்’ என, வெள்ளை மாளிகை டாக்டர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 74, அவரது மனைவி மெலானியா, 50, ஆகியோருக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.மெலனியா, வெள்ளை மாளிகையிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அதிபர் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில், நான்கு நாட்கள் சிகிச்சை பெற்ற பின், சமீபத்தில், டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். அன்று முதல், வெள்ளை மாளிகையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.சமீபத்தில், ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் நன்றாக இருக்கிறேன். இப்போதே பிராசார கூட்டங்களில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.இந்நிலையில், டிரம்ப் உடல்நிலை குறித்து,…

Read More
1 115 116 117 118 119 425