ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு
அமெரிக்காவின் ஹௌஸ்டன் நகரில் சீனா உட்பட பல நாடுகளின் வர்த்தக மற்றும் அரசியல் தலைமையகங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படும். தற்போது சீன-அமெரிக்க மோதல் போக்கு காரணமாக ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது சீனாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடங்கி ஹாங்காங் கையகப்படுத்தும் சீனாவின் திட்டம் வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்து வருவது அனைவருக்கும் தெரியும். சீனாவை எப்படியாவது பழிவாங்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சீனா ஹாங்காங்குடனான…
Read More









