அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!

கொரோனா தொற்றுக்கு மத்தியில், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் ஆனி சிவனுக்குரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. வடமாநிலங்களில் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மத நடவடிக்கைகளை தடை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில், கோவில் பிரசாதத்தை நாட்டின் எந்தவித பகுதிக்கும் அஞ்சல்துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு…

Read More

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

நேபாளத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேபாளத்தில் லாம் மாவட்டத்தில் 2009 முதல் ஸ்ரீ சப்தமய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.இங்கு வேத பாடங்களுடன் நவீன கல்வியும் போதிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு இந்தியா 1.94 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டித் தந்துள்ளது. இதன் திறப்பு விழா ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் நேபாள கல்வித் துறை அதிகாரிகள் இந்திய துாதரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள் மாணவர்கள் தங்க ஒன்பது அறைகள் குழு கல்விக்கு நான்கு அறைகள் கருத்தரங்கு கூடம் வரவேற்பறை உள்ளிட்டவை…

Read More

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக புதிய சாதனையை இந்திய ரயில்வே படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது. ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள் இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் பினாவில், ஒரு சூரிய மின்சக்தி நிலையம் (Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள்…

Read More

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா – சீனா எல்லை பதற்றம்

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா – சீனா எல்லை பதற்றம்

லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் இன்று ராணுவத்தினரிடையே பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி ‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார் போது, வீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு – ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்த்து நிற்க, படைக்கு உதவுகின்றன என்று பொருள்தரும் இந்த திருக்குறளை இன்று மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பலகீனமாக…

Read More

சர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை

சர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை

சர்வதேச புத்தமத கூட்டமைப்பு சார்பில் நாளை( 4 ம் தேதி) கொண்டாடப்பட உள்ள தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்திய அரசின் கலாசாரத்துறை தலைமையின் கீழ் சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஆசாத் பூர்ணிமா தினத்தை தர்மசக்ரா தினம் கொண்டாடப்பட உள்ளது. புத்த மதத்தவர்களும், இந்து மதத்தவர்களும் தங்களின் குருக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, மனிதர்களின் துன்பங்களை போக்க புத்தர் வழங்கிய போதனைகள் குறித்து வீடியோ மூலம் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், மற்றும் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கின்றனர்….

Read More

இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!

இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து, சீனா தற்போது, பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சீனா பரந்துவிரிந்த நாடு என்பதால், பல்வேறு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ளது; எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக, தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் சமீபத்தில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தற்போது பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின், 58வது கூட்டம் நடந்தது. இதில் சீனா, பூடானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய…

Read More

சீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்

சீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்

ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு வரும் ஜூலை 27ம் தேி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 4 அல்லது 6 ரபேல் விமானங்களை பிரான்ஸின் இஸ்ட்ரெஸில் இருந்து இந்திய விமானிகள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் பொருத்தப்படக் கூடிய மெட்டோர், ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன ஏற்கனவே இந்தியா வந்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் வந்தவுடன், ‘கோல்டன் ஆரோஸ்’ என்ற தனி ஸ்குவாட்ரன் வரும் ஆகஸ்டில் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மொத்தம் 36 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு ஆறு விமானங்கள் வரும் நிலையில்…

Read More

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சி முறையை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அது பரவுவதற்கு காரணமாக இருந்த சீனா இந்தியாவுடன் எல்லையில் தகராறு செய்ததுடன் ஜப்பானின் செங்காரு தீவுக்கும் உரிமை கொண்டாடுகிறது. ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சீனாவின் முயற்சிகளும் சேர்ந்து சீனாவை சர்வதேச சர்ச்சை மையப்புள்ளியாக மாற்றி உள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தும் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக ஜப்பான், இந்தியா, தைவான் மற்றும் திபெத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் டைகர் மேமன், யாகூப் மேமன், யுசுப் மேமன். இவர்களில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2015-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. யுசுப் மேமனுக்கு தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த யுசுப் மேமனுக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார்.

Read More

நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளரும், இலங்கை தமிழ் திரைப்பட கலைஞருமான எஸ்.நடராஜசிவம் நேற்றிரவு காலமானார். நடா அண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 74. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பிறந்த அவர் தனது 20ஆவது வயதுகளில் ஊடகத்துறைக்குள் நுழைந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ‘ரேடியோ சிலோன்’ வானொலி மூலம் தனது ஊடக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1980களில் இலங்கை சினிமாத்துறையிலும் கால் பதித்தார். ‘லாஹிரு தகசக்’ சிங்கள நாடகத்தின் ஊடாக 1985ஆம் ஆண்டு நாடக வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதன்பின்னர் யசோராவய, அவசந்த, வனஸபந்து, யுக விலக்துவ…

Read More
1 129 130 131 132 133 425