ஹிந்து பெண்ணை கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிமுக்கு திருமணம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து பெண் ஒருவர் கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் முஸ்லிம் நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஹிந்து பஞ்சாயத்து அமைப்பின் பொது செயலர் ரவி தவானி கூறுகையில், கடந்த 15ம் தேதி சிந்து மாகாணத்தின் மதியாரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி திருமணத்தின் போது கடத்தி செல்லப்பட்டு கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், கராச்சியில் ஷாருக் மேமன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க நாங்கள் உதவி செய்தோம். போலீசார் கராச்சி சென்று, சிறுமியை மீட்டு சிந்து மாகாணம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்….
Read More









