கடையில் திருடி விட்டு குழந்தையை மறந்து விட்டு சென்ற பெண்; வைரலான வீடியோ

கடையில் திருடி விட்டு குழந்தையை மறந்து விட்டு சென்ற பெண்; வைரலான வீடியோ

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மிடில்டவுன் நகரில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் பம்பி பேபி என்ற கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு 3 குழந்தைகளுடன், 3 பெண்கள் சென்றனர். அந்த பெண்களில் 2 பேர் கடை ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். இதனிடையே 3வது பெண் அங்கிருந்த ஸ்டிராலர் (குழந்தையை உட்கார வைத்து, கொண்டு செல்லும் தள்ளுவண்டி) ஒன்றை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு கடையை விட்டு வெளியேறினார். ஆனால் தன்னுடன் வந்த குழந்தையை மறந்து கடையிலேயே விட்டு சென்றுள்ளார். மற்ற பெண்களும் வெளியேறி விட்டனர். இதன்பின்பே ஒரு குழந்தை கடைக்குள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. இதனால், சம்பவம் நடந்து 6 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த…

Read More

மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து பாக். பிரதமர் இம்ரான் தனது நாட்டு மக்களிடம் புலம்பல்

மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து பாக். பிரதமர் இம்ரான் தனது நாட்டு மக்களிடம் புலம்பல்

அணு ஆயுதம் கொண்ட இரு நாடுகளிடையே போர் வெடித்தால் அது மொத்த உலக நாடுகளையுமே பாதிக்கும் என காஷ்மீர் விவகாரத்தில் மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து பாக். பிரதமர் இம்ரான் தனது நாட்டு மக்களிடம் புலம்பி தீர்த்துள்ளார். பிரான்சில் நடைபெற்ற ஜி -7 மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்து பேசினர். அப்போது காஷ்மீர் பிரச்னை இரு தரப்பு விவகாரம் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் பாக். பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு டி.வி. வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும். பாகிஸ்தானுக்கு தேவை…

Read More

ப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

ப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கதுறை சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் (ஆக.,26) முடிவடைகிறது. இந்நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி உள்ளது. ஆனால் சிதம்பரத்தின் ஜாமீன் கோரும் மனு இன்றும் (ஆக.26) பட்டியலிடப்படவில்லை. ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில், டில்லி ஐகோர்ட்…

Read More

நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது

நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது

நியூசிலாந்து நாட்டில் எம்.பி. தமாட்டி காஃபி என்பவர் வாடகை தாயின் மூலம் கடந்த ஜூலை மாதம் தந்தையாகி உள்ளார். அவருக்கு பிரசவ கால விடுப்பு வழங்கப்பட்டது. பிரசவ கால விடுப்பு முடிந்தப் பிறகு, முதல் நாளில் தனது மகனுடன் நாடாளுமன்றம் வந்தார். அப்போது மகனுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தது தொடர்பாக பேசினார். எனது மகன் எங்கள் வாழ்வில் அற்புதத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எனக் குறிப்பிட்டார். பின்னர் விவாதத்தில் எம்.பி. தமாட்டி கலந்துக்கொண்டார். விவாதம் தொடங்கிய போது தமாட்டியின் கைக்குழந்தையை சபாநாயக மல்லார்ட் கவனித்துக் கொண்டார். சபாநாயகர் இருக்கையில் இருந்த அவர் குழந்தைக்கு புட்டி பாலில் பால் கொடுத்தார். விவாத நிமிடங்களில் தமாட்டிக்கு குழந்தையால் இடையூறு எற்படாத வண்ணம்…

Read More

நிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு

நிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனிலிருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவல், அடுத்த மாதம், 19 வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, 48, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, அந்நாட்டு போலீசார், கடந்த மார்ச்சில் கைது செய்தனர். நிரவ் மோடியை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்க துறை அதிகாரிகள்…

Read More

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது

தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜிக்கும், அவரது மனைவி இந்திராணிக்கும் சொந்தமான நிறுவனம் ஐ.என்.எக்ஸ். மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007–ம் ஆண்டு மொரிஷியசில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீடு வந்துள்ளது. இந்த தொகை ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகமாகும். இதைத்தொடர்ந்து 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு துறையும், வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றன. இதனை வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தில்…

Read More

சிதம்பரம் எங்கே? : சுப்ரமணிய சாமி

சிதம்பரம் எங்கே? : சுப்ரமணிய சாமி

முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி டுவீட் செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நேற்று (ஆக.,20) தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2…

Read More

நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை

நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை

புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்- 3 இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஒரு போட்டியாளராக மதுமிதா பங்கேற்றார். ஆனால், கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில் மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக காட்டப்பட்டது. அப்போது நிகழ்ச்சி மேடையில் தோன்றிய மதுமிதா கையில் கட்டுடன் காணப்பட்டார். மதுமிதா வெளியேற்றப்பட்டது தொடர்பாக விளக்கம் கூறிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த ஒரு விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து…

Read More

முன் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனு, நாளை மறுநாள் (ஆக.,23) விசாரிக்கப்படும்

முன் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனு, நாளை மறுநாள் (ஆக.,23) விசாரிக்கப்படும்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி ரமணா முன்னர், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார். சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதனை சரி செய்யும்படி பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்…

Read More

புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர். மொறட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூரியனை விடவும் குறைவான பிரகாசத்தை கொண்ட நட்சத்திரமொன்றும், அதனை சூழ இரண்டு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார். நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளானது, குறித்த நட்சத்திரத்தை 13 நாட்களில் சுற்றி வருவதாகவும், மற்றைய கோளானது…

Read More
1 175 176 177 178 179 425