பேட்ட – சினிமா விமர்சனம்

பேட்ட – சினிமா விமர்சனம்

கதையின் கரு: ஒரு கல்லூரி விடுதியில் கதை ஆரம்பிக்கிறது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களை சீனியர் மாணவர் பாபிசிம்ஹா தனது நண்பர்களுடன் சேர்ந்து, ‘ராக்கிங்’ செய்கிறார். அவருடைய அப்பா நரேனின் செல்வாக்கை பயன்படுத்தி ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார். அந்த கல்லூரி விடுதிக்கு வார்டனாக வருகிறார், ரஜினிகாந்த். பாபிசிம்ஹாவின் ஆட்டத்தையும், அராஜகத்தையும் அடக்குகிறார். ரஜினிகாந்தை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்துக்காக பாபிசிம்ஹா காத்திருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சனத் ரெட்டியை ஒரு கும்பல் கொல்ல முயற்சிக்கிறது. அந்த கும்பலின் கொலை வெறியில் இருந்து சனத் ரெட்டியை ரஜினிகாந்த் காப்பாற்றுகிறார். அவரை ரஜினிகாந்த் ஏன் காப்பாற்றினார்? என்பது, ‘பிளாஷ்பேக்’ கதை. அதில் ரஜினிகாந்தின் மனைவியாக திரிஷா வருகிறார். உயிர் நண்பர் சசிகுமார்….

Read More

பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு

அரியானா மாநிலத்தில் ‘பூரா சச்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் ராம்சந்தர் சத்ரபதி. 2002-ம் ஆண்டு மே மாதம் அவர் தனது பத்திரிகையில், சிர்சாவில் உள்ள ஆன்மிகவாதி குர்மீத் ராம் ரஹிம் சிங் நடத்திவரும் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பான ஒரு மர்ம கடிதத்தை வெளியிட்டார். அதன்பின்னர் அக்டோபர் 24-ந்தேதி சத்ரபதியை அவரது வீட்டின் அருகே குர்தீப் சிங், நிர்மல் சிங் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டனர். அந்த துப்பாக்கி கிரிஷன்லால் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த சத்ரபதி பின்னர் இறந்தார். இதுதொடர்பாக குல்தீப்சிங், நிர்மல் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2003-ம்…

Read More

நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. நான் அரசு என்னும் நிர்வாக இயந்திரத்தில் பணிபுரிகின்றவன் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கூறுகின்றார்

நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. நான் அரசு என்னும் நிர்வாக இயந்திரத்தில் பணிபுரிகின்றவன்  வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கூறுகின்றார்

நான் ஓர் அரசியல் கட்சியைச் சார முடியாது. நான் அரசைச் சார்ந்தவன். ஆகவே, மாகாணத்திலோ அன்றி தேசிய ரீதியிலோ எந்தக் கட்சியையும் நான் சாரமுடியாது. நான் வட மாகாண முன்னாள் முதலமைச்சருடனும் பல தடவைகள் உரையாடியிருக்கின்றேன். அவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். எங்களுக்குள் அரசியல் விஞ்ஞான வியாக்கியானத்தின் அடிப்படையில், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆர்வம் கொண்டவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தற்போதைய அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பை மீறும் குற்றமாக அமையாது என்றும் தமிழ் மக்கள் சிறு சிறு கருத்துபேதங்களைப் புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டுமென்று அழைப்பு விடுப்பதாகவும் வட மாகாணத்தின் புதிய ஆளுநர்…

Read More

வடக்கு மாகாணத்தில் உள்ள மொழிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தில் உள்ள  மொழிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஆளுநரால்  குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை அந்த செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே இந்த மொழிக் குழு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read More

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்!!

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்!!

இந்த வயதில் குழந்தைகளுக்குப் பாராட்டு ரொம்பப் பிடிக்கும். அவர்கள், க்ரேயா ன்ஸால் சுவரில் இரண்டு கோடுகள் போட்டாலும், கைதட்டிப் பாராட்டுங்கள். நிறங்களையோ, வடிவங்களையோ அவர்கள் சரியாகச் சொல்லும் போது உடனடியாக ஏதாவது பரிசு கொடுங்கள். அது உங்கள் முத்தமாகக் கூட இருக்கலாம். ஆனால், பரிசை உடனே கொடுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு,‘நான் இதைச் சரியாகச் செய்திருக்கிறேன்’ என்கிற எண்ணம் மனதில் அழுத்தமாகப் பதியும். எல்லா பெற்றோர்களும் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது. 2-3 வயதுக்குள் இருக்கிற குழந்தைகள் துறுதுறுவென ஓடுவார்கள், வேகவேகமாக நடப்பார்கள். ஆனால், அவர்களுடைய குட்டிப் பாதங்களை உற்றுப் பார்த்தீர்களென்றால், அவை முழுமையாகத் தரையில் பதிந்திருக்காது. இப்படித் தரையில் பாதங்கள் பட்டும்படாமல் நடந்துகொண்டிருக்கிற…

Read More

நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரி பிலிப்;பைன்ஸ் பயணமானார்

நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரி பிலிப்;பைன்ஸ் பயணமானார்

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகையில் அந்நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இன்னும் ஒரு நாள் அங்கு அவர் தங்கியிருப்பார். பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூதுவர் அலுவலகமொன்றை திறந்துவைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ_க்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின. 1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்பைன்ஸ_க்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர்…

Read More

அணித் தலைவர் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் அஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா

அணித் தலைவர் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் அஸ்திரேலிய அணியை  வீழ்த்தியது இந்தியா

அஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிககளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 6 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 18 ஓட்டங்களுடனும் கவாஜா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்டாய்னிஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சோன் மார்ஷ் அபாரமாக துடுப்பெடுத்தாடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார்….

Read More

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான அறிக்கையை வ்pரைவில் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான  அறிக்கையை  வ்pரைவில் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

கடந்த நவம்பர் மாதம் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட…

Read More

அதிகாரம் தரப்பட்டால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்துவோம் என்று அட்டகாசமாகப் பேசுகின்றார் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

அதிகாரம் தரப்பட்டால் வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்துவோம் என்று அட்டகாசமாகப் பேசுகின்றார் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

இராணுவத்தினருக்கு மீள அதிகாரத்தைதந்தால் வடக்கில் உள்ள வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்திக் காட்டுவோம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி – தலதா மாளிகைக்கு சில நாட்களுக்கு முன் சென்றிருந்த இலங்கையின் இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாள ர்கள், அந்த குறித்த அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தள பதி, இது குறித்து எழுத்துமூலம் அறிவிக்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், பாதுகாப்பு சபை…

Read More

அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் வடக்கின் புதிய ஆளுநர்

அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் வடக்கின் புதிய  ஆளுநர்

தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேற்படி விடயமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன்.இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை, மகாநாயக்கர்களின் ஆசியுடன் கண்டுபிடிக்க முடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். ஒரு தமிழனாக மாத்திரம் இதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஒரு ஆளுநராக, பௌத்த தத்துவத்தை மதிக்கின்ற ஒருவராகவும், இது சரியானது அல்ல…

Read More
1 214 215 216 217 218 425