போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற தீர்மானத்திலிருந்து நான் பின்வாங்கமாட்டேன் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற  தீர்மானத்திலிருந்து நான்  பின்வாங்கமாட்டேன்  முல்லைத்தீவில்  ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட் டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன் போது ஜனாதிபதி அறிமுகப்படுத் தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ்நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்….

Read More

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல் வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல்  வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

வலிகாமம் வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை தமது காணிகளுக்குச் செல்லவந்த காணிஉரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை அன்றைய தினம் மீளமக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார். இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திங்கள் காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் எவரையும்…

Read More

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல: – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல:   –  சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்,அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம்.ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.ஜெனீவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் அதியுச்சஅவாவும் ஆசையும்.நாம்…

Read More

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயற்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் தொலைபேசி…

Read More

அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிரமப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தiiமை – கொழும்பிலிருந்து பாலச்சந்திரன்

அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிரமப்படும்  தமிழ் தேசிய கூட்டமைப்புத் தiiமை  –  கொழும்பிலிருந்து பாலச்சந்திரன்

இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிரக்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு நேர்முரணாக விக்கிரமசிங்கவை தங்களது நலன்களிலும் அக்கறைகளிலும் அனுதாபம் கொண்டவராக தமிழர்கள் நோக்குகிறார்கள். ராஜபக்சவை ஆட்சியதிகாரத்திலிருந்து விலக்கிவைத்திருப்பதற்கு கூட்டமைப்பு அதனால் இயன்ற சகலதையும் செய்யவேண்டியிருக்கிறது. ஆனால்,…

Read More

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உருவான சர்ச்சைகள்,கலவரங்கள்,…

Read More

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் சுகந்தி!!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல்   சுகந்தி!!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டம் நாளை 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் மற்றும் தென்னிலங்கை சகோதர ஊடக அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.திருமலையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களாக நடத்தி வரும் போராட்டம்,புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. தலைநகர் டாக்காவையொட்டி சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 10,000 பேர் போலீஸாரால் வீச்சானந தண்ணீரைப் பாய்ச்சி அப்புறப்படுத்தப்பட்டனர். டாக்காவின் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 5,000 பேரைக் கலைப்பதற்காக போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

Read More

உலகின் வயதில் மிக அதிகமானவர் என்ற புகழுக்குரியவரான ஜப்பானியர் காலமானார்

உலகின் வயதில் மிக அதிகமானவர் என்ற புகழுக்குரியவரான ஜப்பானியர்   காலமானார்

உலகில் மிகவும் வயதான நபர் என்று அறிவிக்கப்பட்டிருந்த மசாஸோ நோனாக்கா ஜப்பான் நாட்டில் தனது 113ஆவது வயதில் கடந்த வாரம் காலமானார். உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிக காலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

Read More

ட்ரம்ப் – கிம் சந்திப்பு மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என வெள்ளைமாளிகை அறிவித்தது

ட்ரம்ப் – கிம் சந்திப்பு  மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என  வெள்ளைமாளிகை அறிவித்தது

அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வோஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என ட்ரம்பும், கிம்மும் உறுதி எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தினபடி, அணு ஆயுதங்களை…

Read More
1 212 213 214 215 216 425