நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது

நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.வேணுகோபால் அவர்களின் நேர்காணல் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது. சிறிய வயதில் பாரதியார் சொன்னதுபோல் ‘ஓடிவிளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ இதுதான் தடுப்பு. இவ்வாறு கூறுகின்றார் நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.வேணுகோபால் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “சிறகு” மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி பேட்டியின் முழு வடிவம் இதோ!! கேள்வி: டாக்டர் உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர் என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில்…

Read More

காந்தியடிகள் பெருங்குற்றவாளிபோல அடைக்கப்பெற்றாலும் புத்தகங்களுடனும் புனித சிந்தனைகளுடனும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்

காந்தியடிகள் பெருங்குற்றவாளிபோல அடைக்கப்பெற்றாலும் புத்தகங்களுடனும் புனித சிந்தனைகளுடனும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்

இந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி அனைத்தையும் இழந்துள்ளனர். தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது அல்ல இந்திய சுதந்திரம். செந்நீர் ஊற்றி கண்ணீரால் காத்துப் பெற்றது சுதந்திரம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை பேர் இன்னுயிர் இழந்தனர். சிறைபட்டனர். எண்ணிக்கை எண்ணி முடியாது. வரலாறு சொல்லி முடியாது. அண்ணல் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அக்காலத்தில் ஆண்ட ஆங்கில அரசிற்கு எதிராக, பத்திரிக்கைகளில் காந்தியடிகள் எழுதி மக்கள் அமைதியைக் குலைக்கிறார் என்பது அரசு தரப்புக் குற்றச்சாட்டு. இதனைக் காந்தி எதிர்கொள்கிறார். வழக்கறிஞராக, பாரிஸ்டராக தென்ஆப்பிரிக்காவில் கடமையாற்றிய அண்ணல் காந்தியடிகள்…

Read More

இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்… : கமலுக்கு எச்.ராஜா பதிலடி

இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்… : கமலுக்கு எச்.ராஜா பதிலடி

கொல்கத்தா காவல்துறை ஆணையரைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியது பற்றி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் கருத்தைத் தெரிவித்ததற்கு தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். கமல்ஹாசன் கூறும்போது, “மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சுயமரியாதை உள்ள எந்த அரசும் இது போன்ற அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளாது” என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம். நம்புவோம். சுயமரியாதைக்கும் தேசவிரோதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்” என்று சாடியுள்ளார்.

Read More

பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் -ராகுல்காந்தி

பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் -ராகுல்காந்தி

மேற்கு ஒடிசாவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:- ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறோம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மக்கள் பலனடைந்தனர். ஆனால் அதைக் காட்டிலும் பெரிய நன்மை குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தின் மூலம் கிடைக்கும். 5 முதல் 6 மாதங்களுக்கு அனைத்து ஏழைகளுக்கும் இந்த வருமானம் கிடைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. பிரதமர் மோடி, ஒரு விவசாயி குடும்பத்துக்கு 17 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்கும். இப்பணம் தனிப்பட்ட…

Read More

உலகம் செய்தி பழிவாங்கும் அரசியலை ஒதுக்குவோம் : டிரம்ப்

உலகம் செய்தி  பழிவாங்கும் அரசியலை ஒதுக்குவோம் : டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்க கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பழிவாங்கும் அரசியலை ஒதுக்க வேண்டும் என எம்.பி.,க்களிடம் கேட்டுக் கொண்டார். தலைநகர் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க கூட்டுக் குழு கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர், பழிவாங்குவது, எதிர்ப்பது, தண்டனை வழங்குவது போன்ற அரசியலை தவிர்த்து ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் பொதுநலன் அடிப்படையிலான அரசியலே சாத்தியப்படக் கூடியது. சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியன அமெரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது. கடந்த காலங்களில், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள்…

Read More

யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் பார்க்கும் ஒப்புகைச் சீட்டு: நாடாளுமன்ற தேர்தலில் 100% அமல்: தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் பார்க்கும் ஒப்புகைச் சீட்டு: நாடாளுமன்ற தேர்தலில் 100% அமல்: தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

2019- நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை 100% அமைக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க உத்தரவிடக்கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியராஜ் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். தவறவிடாதீர் நான் யார் தெரியுமா? சிபிஐ, இண்டர்போல், வருமான வரித்துறை, பிரதமர் பாதுகாப்பு அதிகாரி: போலீஸாரை தலைச் சுற்றவைத்த நபர் கைது அவரது மனுவில், “மின்னணு ஓட்டுப்பதிவு…

Read More

யோகி ஆதித்யநாத் விவகாரம்: மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? மம்தா கேள்வி

யோகி ஆதித்யநாத் விவகாரம்: மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? மம்தா கேள்வி

மேற்கு வங்காளத்தில் பேரணிக்கு சென்ற அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர்கள் இறங்க கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்கிறது. தேர்தல் ஆணையத்திடமும் பா.ஜனதா புகார் அளித்துள்ளது. இப்போது இவ்விவகாரத்தில் பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, மராட்டியம், பீகாரில் எனக்கு என்ன நடந்தது? என கேள்வியை எழுப்பியுள்ளார். மராட்டியம் மற்றும் பீகார் சென்ற போது அரசு மாளிகையில் தங்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார். மராட்டியத்தில் பா.ஜனதா அரசும், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி அரசும் நடக்கிறது. எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற பா.ஜனதா தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி பதிலடியை கொடுத்துள்ளார்.

Read More

உலகம் செய்தி பின்னாடி தோனி இருந்தால்… வீரர்களுக்கு ஐ.சி.சி., எச்சரிக்கை

உலகம் செய்தி  பின்னாடி தோனி இருந்தால்… வீரர்களுக்கு ஐ.சி.சி., எச்சரிக்கை

துபாய்: இந்திய அணியின் ‘சீனியர்’ விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டன் தோனி, 37. சிறந்த ‘பினிஷர்’ என்று பெயர் பெற்றவர். தவிர விக்கெட் கீப்பிங் பணியிலும் கலக்கி வருகிறார். மின்னல் வேகத்தில், கண் சிமிட்டும் நேரத்துக்குள் ‘ஸ்டம்பிங்’ செய்வதில் வல்லவர். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்த போது ஜாதவ் பந்தை எதிர்கொண்டார். பந்து நீஷம் கால் ‘பேடில்’ பட்டுச் செல்ல ‘எல்.பி.டபிள்யு.,’ கேட்டு சகால் உள்ளிட்ட எல்லோரும் அப்பீல் செய்தனர். இதற்கு அம்பயர் மறுக்க நீஷம் கிரீசை விட்டு வெளியே சென்றார். அந்த நேரத்தில் மாற்றி யோசித்த தோனி, உடனடியாக பந்தை பிடித்து ரன் அவுட்…

Read More

இலங்கைவாசி அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும் இந்திய தலைவர்கள்

இலங்கைவாசி அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும் இந்திய தலைவர்கள்

காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது. இலங்கையின் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா – ஒரு சலவைத் தொழிலாளி. அருகிலுள்ள அக்கரைப்பறில்தான் அவரின் கடை அமைந்துள்ளது. கடையின் சுவர் முழுக்க இந்தியத் தலைவர்களின் பிரேம் செய்யப்பட்ட படங்களாகவே உள்ளன. விவேகானந்தர் தவிர, அத்தனை பேரும் அரசியல் தலைவர்கள். “வட நாட்டுத் தலைவர்கள், தமிழ்நாட்டு தலைவர்கள் என்கிற பேதங்களின்றி, இவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்” என்கிறார் அழகய்யா. 1963இல்…

Read More

பயனற்ற அரசுக்காக உங்களது வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்; ஹசாரேவிடம் ராஜ் தாக்கரே வேண்டுகோள்

பயனற்ற அரசுக்காக உங்களது வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்; ஹசாரேவிடம் ராஜ் தாக்கரே வேண்டுகோள்

சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான மராட்டியத்தை சேர்ந்த அன்னா ஹசாரேவின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக் ஆயுக்தா அமைப்புகள் மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த வலியுறுத்தியும் அன்னா ஹசாரே காந்தி நினைவு தினமான கடந்த புதன்கிழமை தனது உண்ணாவிரத…

Read More
1 210 211 212 213 214 425