தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்

தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கில் போலீசார் எனக்கு எதிராக திரும்பியதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார். ‘மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்’ என, டி.ஜி.பி., அலுவலகத்தில், போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர். இன்றும் சில போலீசார் புகார் அளித்தனர். இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்பா்த்தது தான். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட் தான் என்னை நியமித்தது. என் மீது புகார் கூறிய 21 பேரும் 400 நாளில் ஒரு…

Read More

ஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர்

ஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர்

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாநகரங்களுக்கு மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வர் மனோகர் லால் கட்டார் பா.ஜ., வேட்பாளர்களுக்காக தீவிரமாக இறுதி கட்ட பிரசாரம் செய்தார். இதன் பலனாக யமுனா நகரில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் மதன்சிங் பிற வேட்பாளர்களை விட 40 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ரானிபட் நகரில் பா.ஜ., வேட்பாளர் அவ்நீத் 74,900 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கர்னால், ஹிசார்,ரோஹ்தக் நகரில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக கட்சியின் சின்னத்தை பயன்படுத்த வில்லை. அதே…

Read More

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது எதிர்த் தரப்பில் இருந்துவந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அதன் பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முடிவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. இதையடுத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில் இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில்…

Read More

300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்

300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்

பிரேசிலியா : பிரேசிலில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார். பிரேசிலில் ஜவாகோ டிக்சிரா டி பரியா என்பவர் பாதிரியாராகவும், மனநல மருத்துவராகவும் உள்ளார். ஆன்மீக முறையில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த அவர், 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பிரேசில் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.

Read More

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. புதிய அரசு மே மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்படும். இதேபோன்று அடுத்த வருடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும். இந்நிலையில், அரசியல் உற்றுநோக்குனர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடையவரான மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய உங்களது கணிப்புகளை கூறுங்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெட்லி, விராட் கோலி மற்றும் நரேந்திர மோடி இருவரும் தங்களது துறைகளில் ஆச்சரியப்படத்தக்க வீரர்கள். அவர்களை எளிதில் வீழ்த்த முடியாது என கூறினார். அவர் தொடர்ந்து கூறும்பொழுது, கோலி…

Read More

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் – பாக். உள்துறை அமைச்சர்

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் – பாக். உள்துறை அமைச்சர்

பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுவது தொடர்பாக இம்ரான் கான் பேசுகையில், ஹபீஸ் சயீத் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொருளாதாரத் தடை உள்ளது. ஏற்கனவே நடவடிக்கை உள்ளது. இப்போது நீதியின் கீழ் உள்ளது. வெளிநாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த…

Read More

புதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு

புதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு

மத்திய பிரசேத முதல்வராக பொறுப்பேற்றுள்ள கமல்நாத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரை தேர்வு செய்ய கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சிந்தித்து ஒருவழியாக முடிவு செய்தது. இதன்படி ம.பி., முதல்வராக கமல்நாத் இன்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நிமிடங்களில் கமல் நாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டியில்: கமல்நாத் 1984 கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி. அவரை முதல்வராக்கி இருப்தன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அகாலி தளம் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் : சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடையவர்களை காங்கிரஸ்…

Read More

தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

2013-ல் கடைசியாக பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற போது பாகிஸ்தான் 0-3 என்று செம உதை வாங்கியது. அதுவும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜொஹான்னஸ்பர்கில் பாகிஸ்தான் அதன் மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரான 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடர் என்றாலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வயிற்றில் மோட்டார் ஓடுவது எதார்த்தமே. கடந்த 5 தென் ஆப்பிரிக்க தொடர்களில் பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொடராகும் ஏனெனில் 3 டெஸ்ட்கள், 5 ஒருநாள், 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடுகிறது. டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது….

Read More

பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது. பொன் மாணிக்கவேல்,பணி நீட்டிப்பு,தடை விதிக்க,சுப்ரீம் கோர்ட் மறுப்பு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்த தனிப்பிரிவு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும் அரசாணைக்கு தடை விதித்தது. மேலும், ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலின் சிறப்பான பணியை பாராட்டி,…

Read More

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தது செல்லாது ; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். ரணிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, புதிய பிரதமராக, ராஜபக்சேவை நியமிப்பதாகவும், அதிபர் சிறிசேன அறிவித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு போதிய, எம்.பி.,க்கள் பலம் இல்லாததை அடுத்து,…

Read More
1 218 219 220 221 222 425