இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் போதுமானதாகும். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளமையினை நிரூபிப்பதற்கான மேற்படி யோசனையினை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்திருந்தார். இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையும் வாக்களித்தன. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்ரமசிங்கவுக்கு…

Read More

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்

பா.ஜனதா ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் கட்சி தேர்தலை எதிர்க்கொண்டது. இப்போது முதல்வர் யார்? என்பது தொடர்பாக முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ளது. இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் ஜோதிராதித்ய சிந்தியாவும் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மாநில தலைமையில் அமரவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ராஜஸ்தானில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு காரணமே சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக் கெலட் இடையிலான மோதல்…

Read More

பிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே

பிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே

பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது, அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது. ஆனால், இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், வெளியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தனியாக இன்னொரு விதமாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் தெரீசா மே-க்கு எதிராக யார் போட்டி போடுவது என்பதில், எதிரணியினர் பிளவுண்டு இருப்பதாக தெரிகிறது, பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ள போவதாக தெரீசா மே…

Read More

ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு – மத்தியபிரதேசத்தில் இழுபறி

ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு – மத்தியபிரதேசத்தில் இழுபறி

5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. சத்தீஷ்கார் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டசபைகளுக்கு நவம்பர் 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு கடந்த 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது….

Read More

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்பு

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்–மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் அவர் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்…

Read More

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு – அறிவிப்பால் பரபரப்பு

யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு – அறிவிப்பால் பரபரப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில மந்திரியுமான சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்ட சித்து ராம்கஞ்ச் மண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியையும், உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து இந்து யுவவாகினி அமைப்பு சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது. ‘‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து யுவவாகினி ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், ‘‘சித்து பாகிஸ்தானை…

Read More

புனே தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார் நடிகை மாதுரி?

புனே தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார் நடிகை மாதுரி?

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிர மாநிலத்தின், புனே லோக்சபா தொகுதியில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க, பா.ஜ., முடிவு செய்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, பா.ஜ., – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, புனே லோக்சபா தொகுதியில், 2019 தேர்தலில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், 51, என்பவரை, பா.ஜ., சார்பில் களமிறக்க, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது, புனே லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, அனில் ஷிரோல் உள்ளார்.இது…

Read More

போராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்: எரிபொருள் விலை உயர்வை இடைநிறுத்த முடிவு

போராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்: எரிபொருள் விலை உயர்வை இடைநிறுத்த முடிவு

சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. “மஞ்சள் ஜாக்கெட்” என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் உருவான வன்முறையும், அழிப்புகளும் குறிப்பாக ‘ஆர்க் ட டிரியோம்ஃபில்’ சிலைகள் சிதைக்கப்பட்டதால் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில்…

Read More

“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார். இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும்…

Read More

பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு

பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு

சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஒராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு…

Read More
1 219 220 221 222 223 425