ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதல்

ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதல்

போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி,, பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பேருந்து, அப்போது சாடா பிராந்தியத்திலுள்ள தயான் சந்தை வழியாக பயணித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதிகள் நடத்தும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. ஏமன் அரசாங்க ஆதரவுடன், அந்நாட்டிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சௌதி தலைமையிலான கூட்டணி இந்த தாக்குதல் ‘சட்டப்படியானதுதான்’ என்று தெரிவித்துள்ளது. தாங்கள் எப்போதுமே பொது…

Read More

கமலஹாசனின் இரட்டை வேடம் : பாலச்சந்தர் , அப்துல் கலாம் வேணாம் .. தி.மு.க வேணும்

கமலஹாசனின்  இரட்டை வேடம் : பாலச்சந்தர் , அப்துல் கலாம் வேணாம் .. தி.மு.க  வேணும்

தமிழுக்காக தனது மூச்சு நிற்கும் வரை போராடிய ஒரே மனிதர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இறந்த பின்னும் தன்னுடைய ஆறடி நிலத்தை போராடியே பெற்று தனது அரசியல் முறையினை மறுபடியும் நினைவூட்டியவர். இவரது இறுதி சடங்கில் அரசியல், சினிமா பிரபலங்கள் என இதுவரை எதிர்த்துவர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக கடவுள் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத கமல், அய்யா அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு கூட செல்லாதவர், நேற்று கலைஞரின் இறுதி சடங்கிற்கு வந்தார். இதற்கு ஒரே காரணம் இவர்கள் இருவருக்கு இடையேயான நட்பு தான். அந்த நட்பு தான் பிறந்ததிலிருந்து கமல் கொண்டிருந்த அந்த கொள்கையையும் சுக்குநூறாக உடைத்துள்ளது.

Read More

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது. இதையடுத்து, ஆக.19ல், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம், கட்சி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் துவங்கி உள்ளன.முறைப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா விஷயங்களையும், முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகன் செய்யத் துவங்கி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.பொதுச் செயலராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என்ற யோசனைக்கும் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பொதுச் செயலர் பொறுப்பில் மூத்த தலைவர்…

Read More

கருணாநிதியின் மறைவிற்கு இலங்கைத் தலைவர்கள் இரங்கல்

கருணாநிதியின் மறைவிற்கு இலங்கைத் தலைவர்கள் இரங்கல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், அவரது ஆதரவாளர் அனைவருக்கும் ஜனாதிபதி சிரிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்து கொள்ளட்டுமா -ஸ்டாலின் உருக்கம் மெரினாவில் இடம் இல்லை, காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்க தயார் – தமிழக அரசு கருணாநிதியின் மறைவினால் தாம் மிகுந்த துயர் அடைவதாக, மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியம், சினிமா, அரசியல் ஆகிய துறைகளுக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது…

Read More

இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்க வேண்டும் ஹர்பஜன்சிங் யோசனை

இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்க வேண்டும் ஹர்பஜன்சிங் யோசனை

லண்டன் லார்ட்சில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து…

Read More

சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்

சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், ” ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். அதே வாசகம் தற்போது பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியை அடக்கம் செய்ய சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்மீது “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற…

Read More

கருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு

கருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இன்று (7.8.2018) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட…

Read More

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி குவியத்துவங்கினர். 11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, மாலை 6.10 மணியளவில் காலமானர். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

Read More

கத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது

கத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது

காஷ்மீரின் கத்துவா நகரில் இந்த வருடம் ஜனவரியில் கோவில் ஒன்றிற்குள் 8 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு, போதை பொருள் கொடுக்கப்பட்டு, கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல போராட்டங்களும் நடந்தன. இதனை தொடர்ந்து சிறுமிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான தலீப் உசைன் என்பவர் பேரணி ஒன்றை நடத்தினார். இதனால் பிரபலம் அடைந்த அவர் இந்த வழக்கில் சிறுமியின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகி வாதிட்டார். இந்நிலையில், உசைன் மீது அவரது உறவுக்கார பெண் ஒருவர் கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் போலீசில்…

Read More

”என்னை கைது செய்யத் தயாரா,” என, மேற்கு வங்க அரசுக்கு, அமித் ஷா சவால்

”என்னை கைது செய்யத் தயாரா,” என, மேற்கு வங்க அரசுக்கு, அமித் ஷா சவால்

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் பேரணி நடத்த, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தடையை மீறி, கோல்கட்டா செல்லப் போவதாக, அமித் ஷா அறிவித்துள்ளார். ”என்னை கைது செய்யத் தயாரா,” என, மேற்கு வங்க அரசுக்கு, அமித் ஷா சவால் விடுத்துள்ளார். வட கிழக்கு மாநிலமான, அசாமில், என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி வரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இடம் பெறாத, 40 லட்சம் பேரை, நாட்டை விட்டு வெளியேற்ற, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, கடும்…

Read More
1 243 244 245 246 247 425