3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா விராட் கோலியின் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இமாலய இலக்கை நோக்கி தொடர்ந்து…

Read More

சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாகச் சத்தீஸ்கரின் 22மாவட்டத் தலைநகரங்களிலும் சிலை நிறுவப்படும். ராய்ப்பூரின் அருகே புதிதாக உருவாக்கப்படும் தலைநகருக்கு அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும். போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் நினைவாகச் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் ஒரு பிரிவு போக்ரான் பட்டாலியன் என அழைக்கப்படும். பிலாஸ்பூர் பல்கலைக்கழகம், ராஜ்நந்தகான் மருத்துவக் கல்லூரி, மார்வா அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கும் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என ரமன் சிங் தெரிவித்தார்

Read More

விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் ‘தி இந்து’ ராம்

விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் ‘தி இந்து’ ராம்

கலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார். அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய கருத்துக்கள்- கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன? என்.ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது . ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என…

Read More

தென்னாபிரிக்காவுடனான ஆட்டத்தில், இலங்கை 20-20 கிண்ணத்தை சுவீகரித்தது

தென்னாபிரிக்காவுடனான ஆட்டத்தில், இலங்கை 20-20 கிண்ணத்தை சுவீகரித்தது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக கொக் 20 ஓட்டங்களைப் பெற்றார். அதன்படி இலங்கை அணிக்கு 99 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இலங்கை…

Read More

இலங்கை தமிழர்கள் பற்றிய ஆல்பம் தயாரிக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,

இலங்கை தமிழர்கள் பற்றிய ஆல்பம் தயாரிக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது இவர் இசையையும் தாண்டி, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியர் பிரேமா காதல்’. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, ஒரு ஆல்பம் தயாரித்து இசையமைக்கவுள்ளார். அது இலங்கை தமிழர் இனப்படுகொலை பற்றியதாம். அவ்வாறு வெளிவந்தால் அது அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழர் தாயகப்பகுதியில் இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் என்கிறார் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில்  இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின்  ஆதரவுடன் இடம் பெறுவதாகவே  சந்தேகம் என்கிறார்  வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில் தொடர்ச்சி யாக இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் எழுந்துள் ளது என தெரிவித்த வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் அலு வலகத்தில் ஊடகவியலாளார் சந்திப்பு இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் எமது மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இதே போன்று வட மராட்சி…

Read More

எமது தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளால் தான் நாம் அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எமது  தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளால் தான் நாம்  அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்கிறார்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எமது தமிழ் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனை களும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளினால் தான் நாம் தொடர்ச்சி யாக அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Chithambara Maths Challenge என்னும் அமைப்பின் ஏற் பாட்டில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணிதப் போட்டிப் பரீட்சைக்கான பரி சளிப்பு விழா நேற்று வல்வெட்டித்துறை தீரு வில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதா னத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி நிலையில் பின்தள்ளப்பட்டனர். அவர்களின் குடும்பங்களும்…

Read More

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்றிரவு மரணம் அடைந்தார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்றிரவு மரணம் அடைந்தார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீசில் (1-0) டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வடேகரின் மறைவு குறித்து சச்சின் கூறியதாவது: வடேகர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை…

Read More

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள், 70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஜூரி அறிக்கை அமெரிக்காவை உலுக்கியுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த எட்டு டையோசிஸ்கள் உள்ளன. அவற்றில், 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில், 6 டையோசிஸ்களின் சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரை, அந்த மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட்டுக்கு உட்பட்ட ஜூரி அமைப்பு இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன், இதுபோல் ஜூரி அமைப்பு விசாரணை நடத்துவது, அந்த மாகாண நடைமுறை. 900 பக்கங்கள் கொண்ட…

Read More

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) மாலை 5. 05 மணியளவில் காலமானார். முன்னதாக அவர் சிகிச்சை பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம்…

Read More
1 241 242 243 244 245 425