முன்னாள் போராளிகளுடன் இணைய மக்கள் அஞ்சுகின்றார்களள் என்கிறார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

முன்னாள் போராளிகளுடன் இணைய மக்கள் அஞ்சுகின்றார்களள் என்கிறார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறையில் இருக்கும் போது இராணுவத்தினர் வசம் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் இணைவதற்கு ஊர்மக்கள் அஞ்சுகிறார்கள் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், அந்த நிலை தொடராமல் இருப்பதற்கு முன்னாள் போரா ளிகளுக்கான அனைத்து செயற்திட்டங்க ளையும் அரசும் நாமும் இணைந்து முன் னெடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து கல ந்துரையாடினார்கள். குறித்த சந்திப்பின் பின் னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் பலர் சிறையில்…

Read More

யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்ற யாழ்.மாநகர சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்ற யாழ்.மாநகர சபையில் தீர்மானம்

இலங்கையில் மத்திய அரசினால் கையகப்படு த்தப்படும் யாழ்.மாநகர சபை எல் லைக்குட்பட்ட புராதன சின்னங் களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என மாநகர சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதா ந்த அமர்வு அண்மையில் நடைபெற்றது. அதில் மேற்குறித்த பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வை.கிருபாகரன் முன்மொழிந்தார். அதில் வடக்கில் உள்ள முக்கிய உள்;ராட்சி நிர்வாகமாக யாழ்.மாநகர சபை திகழ்கின்றது. எனவே இச் சபைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. எனவே யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களை சபையின் நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அதனை சுற்றுலா தளமாக…

Read More

யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில்

யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில்

யாழ்ப்பாணம் பலாலி விமா னத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அதிகாரிகள் மூவர் நேரில் வந்து ஆராய வுள்ளனர். பலாலி விமான நிலையத்துக்கு வருகை தரும் இந்திய அதிகாரிகள் மூவரும், விமான ஓடுபாதை மற்றும் விமான நிலைய அமை விடம் என்பன தொடர்பில் ஆராய்ந்துஅன்று பிற்பகலே கொழும்பு திரும்புவர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக சீர மைக்க இலங்கை – இந்திய அரசுகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டது. அத்துடன், பலாலியிலிருந்து தமிழகத்துக் கான விமான சேவையை ஆரம்பிக்கவும் இந்தியா, இலங்கையிடம் விருப்பம் தெரிவி த்தது. இந்த…

Read More

தையிலிட்டி திஸ்ஸ விகாரையின் புனர்நிர்மாணம் நலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும்; பணியை ஆற்றும்; என்கிறார் வட மாகாண ஆளுனர்

தையிலிட்டி திஸ்ஸ விகாரையின் புனர்நிர்மாணம் நலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும்; பணியை ஆற்றும்; என்கிறார் வட மாகாண ஆளுனர்

உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிவடைந்த காங்கேசன்துறை தையிலிட்டி திஸ்ஸ விகாரையினை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான தொடக்க விழாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றும்போது வடக்கு மாகாண ஆளுனர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் தேவையாக இருப்பது புத்த பெருமான் சொன்ன தர்மம். மீழ் புனர்நிர்மாணம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இந்த விகாரை சாந்தி சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான மத்தியஸ்தலமாக அமைய வேண்டும் என்பது எனது வேண்கோளாக இருக்கின்றது. இந்த விகாரை ஒரு தனிப்பட்ட விகாரையாக இருக்க முடியாது சிங்கள பௌத்த சமயம், சீன பௌத்தம் சமய, கொறிய பௌத்த சமயம் என்று…

Read More

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ள வேண்டாம் என வடமாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்;வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ள வேண்டாம் என வடமாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்;வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளது. இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து…

Read More

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்; என்று தமிழர்களிடம் கேட்கும் ஜனாதிபதி யாழ் மண்ணில் வாள்வெட்டும் வேண்டாம் என்று கேட்கவில்லையே!!

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்; என்று தமிழர்களிடம் கேட்கும் ஜனாதிபதி  யாழ் மண்ணில் வாள்வெட்டும் வேண்டாம் என்று கேட்கவில்லையே!!

முன்னாள் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சா, தானே விடுதலைப் புலிகளை வென்று, யுத்தத்தை நிறுத்தியவர் என்று மார் தட்டுகின்ற நாட் தொடக்கம், தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதைப்போன்றே மகிந்தாவை வெற்றி கொண்டு. தமிழ்த் தேசியகூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஜனாதிபதியா பதவியேற்ற பின்னர் குறைந்தது ஆயிரம் தடவை என்றாலும் கூறியிருப்பார் “மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்” என்று. யாழ் மண்ணை நோக்கி அவர் தனது பட்டாளங்களுடன் “படையெடுக்கும்” போது தனது முன்னைய உரைகளின் பிரதிகளையும் கொண்டுதான் வருகின்றாரா என்ற கேள்வியே எம் அனைவர் முன்பாகவும் எழுந்து நிற்கின்றது. சுpல நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் மயிலிட்டி…

Read More

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிட தமது அரசாங்கத்தின் நிதி அச்சிடும் நிறுவனத்தில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பல நாடுகள் முற்பதிவு செய்துள்ளதாக, சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவர் லீ குயிஷென்க், சீன வங்கியினால் தயாரிக்கப்படும் மாதாந்த சஞ்சிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவற்றில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனம், உலகின் பாரிய நாணயத்தாள் அச்சிடும் நிறுவனமாகக் கருதப்படுகின்றது. இலங்கைக்கு தேவையான எவ்வித பணமும் சீனாவில் அச்சிடப்படுவதில்லை என இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டது….

Read More

எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் – டிரம்ப்

எனக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினால் சந்தை சரிவடையும் – டிரம்ப்

2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது. இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஃபாக்ஸ் நியூசுக்கு தந்த பேட்டியில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தங்களுக்கு உறவு இருந்ததாக கூறிய இரண்டு பெண்கள் தேர்தல் நேரத்தில் பேசாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பணம் தரப்பட்டது என டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் கூறினார். அப்படி பணம் தந்தது…

Read More

மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட மனுஷ்யபுத்திரன் ( விக்கிபீடியாவின்படி இயற்பெயர் அப்துல் ஹமீது), அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பா.ஜ., முன்னாள் பிரமுகர் ஜமீலா தெரிவித்தார். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார். வழக்கமான ஒன்று கூட்டங்களிலும் கவிதைகளிலும் இந்து மத பழக்க வழக்கங்களை விமர்சித்து பேசுவதும் எழுதுவதும் மனுஷ்யபுத்திரனின் வழக்கம். அவரது எழுத்தை பலர் படித்தாலும், ஏற்கனவே இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தும் மற்று மதத்தை விமர்சிப்பதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. நாளாக நாளாக, தன்னை பேச கூப்பிடும் அமைப்புகளை மகிழ்விப்பதற்காகவே அவர் மாற்று மதத்தை விமர்சித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தி.மு.க.,வின் அனுதாபியாகவும் இருக்கிறார். ஊழியின்…

Read More

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு

இலங்கை சென்றுள்ள பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மடமுலனாவில் உள்ள ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும், மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில், ‘‘இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை…

Read More
1 240 241 242 243 244 425