டிராபிக் ராமசாமி – விமர்சனம்

டிராபிக் ராமசாமி – விமர்சனம்

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது. 60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி என்று நடுத்தர குடும்பம் இருக்கிறது. அவர் சமூக பிரச்சினைகளை தன் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுகிறார். இதனால் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்களின் பகையை சம்பாதிக்கிறார். அவர்களின் அடியாட்கள் கொடுக்கும் அடி-உதையை வாங்குகிறார். என்றாலும் பயப்படாமல், அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார். ‘பான்பராக்’ போட்டு ரோட்டில் எச்சில் துப்புபவரை அடித்த குற்றத்துக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் ராமசாமி மீது பெண் இன்ஸ்பெக்டர் எச்சிலை துப்பி விட்டு, “இப்ப என்ன செய்வே?”…

Read More

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் ரத்தன் டாடா

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் ரத்தன் டாடா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து, மும்பையில் நடக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், சமீபத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆக.,24ல், மும்பையில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், ‘நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின்’ பொன் விழா நிகழ்ச்சியில், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, 81, பங்கேற்க உள்ளதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின் செயலர் கூறியதாவது: மும்பையில், டாடா நினைவு மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள, நானா பால்கர் ஸ்மிரிதி…

Read More

பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு

பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு

பாகிஸ்தானில் சிக்கியருக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக். கில் வசித்து வரும் சீக்கியர் குலாம் சிங் சமூக வலைதங்களில் பதிவியேற்றியதாவது: பாகிஸ்தானில் லாகூரில் தியரா சாஹால் பகுதியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன்.அங்குள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் மனைவி ,குழந்தைகளுடன் குடியிருந்து வந்தேன்.. . அந்த அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் திடீரென என்னை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்து வெளியேற்றினார். மேலும் தனது அடியாட்களுடன் வந்த எனது தலைப்பாகையை அகற்றினர். எனது மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்து கொண்டார். இவ்வாறு அவர் பதிவியேற்றி யிருந்தார். குலாம்சிங்கின் பதிவேற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது

Read More

‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா?’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால்

‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா?’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால்

ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடருக்காக வரும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்போம். கேப்டன் விராட் கோலியை சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராவும் கம்மின்ஸ் சவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. பந்தைசேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆதலால், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக்…

Read More

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய்லாந்து தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23–ந் தேதி சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் அவர்களை தேடும் வேட்டை நடந்தது. அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4…

Read More

பணமோசடி வழக்கு: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

பணமோசடி வழக்கு: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்தது. இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட…

Read More

நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது. தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலப்பு முறையில் இம்முறை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில், நவோதய…

Read More

Doug Ford Is Dead Right, Injection Sites Dead Wrong

Doug Ford Is Dead Right, Injection Sites Dead Wrong

Not all the lunatics are in the asylum. Why? Because federal prison officials are providing needles to prisoners so they can inject themselves with illegal drugs. Now, Doug Ford, Premier of Ontario, is being criticized for damning the use of injection sites in prison and in Canadian cities. Condoning drug use is the most illogical way to combat North America’s opioid epidemic. But what else would work? The drug problem is like a cancerous growth…

Read More

பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா – பிரிட்டன் அரசுக்கு சிக்கல்

பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா – பிரிட்டன் அரசுக்கு சிக்கல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளது, பிரிட்டன் அரசுக்கு அரசியல் சிக்கல்களை அதிகரித்துள்ளது. பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் அரசின் பிரதான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் டேவிட் டேவிஸ் ஞாயிற்று கிழமையன்று ராஜிநாமா செய்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் தெரீசா மே முன்வைத்த முன்மொழிவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சரவை வெள்ளியன்று ஒப்புக் கொண்ட பிறகு இவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர். முன்னதாக, இந்த முன்மொழிவுகள் தொடக்கத்திலேயே மிகவும் விட்டு கொடுப்பதாக டேவிட் டேவிஸ் கூறியிருந்தார். பிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸ் தனது பதவியில்…

Read More

நிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது ; மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது ; மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். . அதில் ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். முகேஷ், பவன்குமார், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டில்லி ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு…

Read More
1 249 250 251 252 253 425