விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை…

Read More

காவிரி வாரிய கூட்டத்தில் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆலோசனை: மத்திய அரசு

காவிரி வாரிய கூட்டத்தில் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆலோசனை: மத்திய அரசு

காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கூறுகையில், காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்த திட்டம் வகுக்க குழு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சுமூக தீர்வு காண திட்டம் வகுக்கப்படும். கோர்ட் உத்தரவை அமல்படுத்துவுதற்கான ஆயத்த காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, 192 டி.எம்.சி., காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீரை 177.25 டி.எம்.சி.,யாக குறைத்து, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு வாரத்திற்குள்…

Read More

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரு போலீஸ் முதல் கைது நடவடிக்கை

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரு போலீஸ் முதல் கைது நடவடிக்கை

பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர் கவுரி லங்கேஷ் 6 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டும், பிற தகவல்களை கொண்டும் போலீஸ் விசாரணை நடத்தியது. நீண்ட நாட்களாக எந்தஒரு நகர்வும் இல்லாமல் விசாரணை நீடித்தது. கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியது. விசாரணை தொடர்பாக விசாரிக்கும் போலீஸ் துணை ஆய்வாளர் எம் என் அனுசேத், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நவீன் குமார் என்பவர் சட்டத்திற்கு விரோதமாக ஐந்து தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் கைதாகி சிறையில்…

Read More

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் – பா.ஜனதா

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் – பா.ஜனதா

திரிபுரா மாநில புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவின் விப்லப் குமார் தேப் இன்று பதவியேற்றுக் கொண்டார். விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி, ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மிகவும் எளிமையான முதல்-மந்திரியாக இருந்த மாணிக் சர்க்கார் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறிய அலுவலகத்தில் தங்கிஉள்ளார். எப்போதும் இல்லாத நிகழ்வாக பா.ஜனதா தலைவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்ற மாணிக் சர்க்காரும் இன்று பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொண்டார். திரிபுராவில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிப்பெற்றதும் அக்கட்சியின் தொண்டர்கள்…

Read More

மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கை விரித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று (வியாழன்) வெளியேறுகிறது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர். ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது. அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும்,…

Read More

அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியது உண்மை என்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். மதுரவாயலில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசும்போது, ‘தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப நான் வருகிறேன்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றது குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் சளைக்காமல் பதில் அளித்தார்….

Read More

சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனம்: எச்.ராஜாவுக்கு ரஜினி கண்டனம்

சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனம்: எச்.ராஜாவுக்கு ரஜினி கண்டனம்

சிலையை உடைப்பேன் என்பதும், சிலையை உடைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று எச்.ராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் திரிபுராவில் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா முகநூலில் பதிவிட்டது சர்ச்சையை எழுப்பியது. இதை அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டித்தனர். இந்நிலையில் அன்று இரவே பெரியார் சிலை சில இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எச்.ராஜா தனது பதிவுகளை நீக்கினார். ஆனால் அன்று முழுதும் ரஜினியோ, கமலோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இரவு 10 மணி அளவில் கமல் ட்விட்டரில் மற்ற கட்சித்தலைவர்களுக்கு புத்தி சொல்வது போல் இதை கண்டித்திருந்தார். ஆனாலும் ரஜினிகாந்த் வாயே திறக்கவில்லை. வழக்கமாக…

Read More

சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்

சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடர்பான பணிகளிலும், மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சியை அறிவிப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ள ரஜினிகாந்த், சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் புளூடிக் வெரிஃபைடு குறியீட்டுடன் ரஜினிகாந்த் பக்கம் உள்ளது. பேஸ்புக் பக்கத்தில் தனது முதல் பதிவாக “ வணக்கம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வணக்கம்! வந்துட்டேன்னு சொல்லு! என்ற பதிவையும் இட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் கணக்கு துவங்கி அவ்வப்போது சில தகவல்களை பதிவு செய்து வருகிறார். மக்கள் நீதி…

Read More

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மார்ச் 31-ல் வைகோ நடைபயணம்: திமுகவுடன் கூட்டணி தொடரும்; மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மார்ச் 31-ல் வைகோ நடைபயணம்: திமுகவுடன் கூட்டணி தொடரும்; மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்ச் 31-ம் தேதி மதுரையில் இருந்து வைகோ தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என மதிமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திராவிட இயக்கத்தின் ஒற்றுமையைக் கட்டமைக்கிற வரலாற்றுக் கடமையை மதிமுக மேற்கொண்டு வருகிறது. திமுகவுடன் நட்பும் தோழமையும் தொடரும். காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அரசியல் சட்ட அமர்வின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்துக்கு…

Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்புகிறார்கள்: எச்.ராஜா மீது கமல் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்புகிறார்கள்: எச்.ராஜா மீது கமல் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து திசை திருப்பும் ஏற்பாடு இது. பெரியாரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் பாருங்கள் என்று கமல் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”பெரியார் பற்றிய கூற்று கீழ்த்தரமானது. சட்ட வல்லுநர்களிடம் கேட்க வேண்டும், அதில் தண்டனையும் உள்ளதா என்று. மற்றபடி பெரியாரின் சிலைக்கு போலீஸார் பாதுகாப்பை விட மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இது போன்ற கலக வார்த்தைகள் தேவை இல்லை. முக்கியமாக திசை திருப்பாமல் இருக்க வேண்டும். இலக்கு என்ன என்பது பற்றி பாராமல் திசை திருப்பாமல் இருக்க வேண்டும். எது திசை திருப்பல் என்று கொஞ்சம் யோசித்துப்…

Read More
1 278 279 280 281 282 425