சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். கடந்த பல மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்  இன்று காலை 20.3.18 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 75. சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடராஜன், இன்று 20.3.18 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் இறந்தார். அவரின் உடல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்பட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிறகு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்திற்கு அஞ்சலிக்காவும் இறுதிச் சடங்கிற்காகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா…

Read More

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை தமிழகத்தின் பல பகுதிகளுக்களிலும் செல்ல திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. இவ்விவகாரம் இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர்அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு…

Read More

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து உள்ளது. மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும்…

Read More

பன்னீர்செல்வம் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

பன்னீர்செல்வம் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

அ.தி.மு.க.,வில், நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி. இதனால், அணியாக செயல்பட்டபோது, தன்னோடு கூட இருந்தவர்கள் பலருக்கும் கட்சியில் பொறுப்பு அளிக்காததால், அவர்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து, அவர், பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவே, நீளமான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என, முதல்வர் பழனிச்சாமிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

Read More

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷஸ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.இக்கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள்…

Read More

வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங் கள் சிலவற்றை நிறுவி மக்கள் சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்

வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங் கள் சிலவற்றை நிறுவி மக்கள்  சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்

பாராளுமன்ற உறுப்பி னர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் வடக்கிலும் கிழக்கிலும் காணா மற்போனோர் பற்றிய அலுவலகங் கள் குறைந்தது நான்கையேனும் நிறுவி அங்கு அந்த மக்கள் யாரு டைய இடைஞ்சலும் இல்லாமல் குறிப்பாக புலனாய்வுத் துறையினரு டைய இடைஞ்சல்கள் இல்லாமல் சர்வதேச மேற்பார்வையோடு சுத ந்திரமாகத் தங்களுடைய சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர் சிவஞானம் சிறீதரன் தெரிவித் துள்ளார். பாராளுமன்றத்தில் இது தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போரில் இராணுவத்தின ரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் கையளி க்கப்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் வெளி யிடப்பட்ட போதிலும் அவர்களுக்கு என்ன…

Read More

தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இலங்கையில் தொடர்ந்துள்ளது ஜெனிவாவில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து இனப்படுகொலை நடைபெறுகின்றது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37-வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஐ.நா நன்கு அறியும். சிறுபான்மை இனத்துக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் அடக்குமுறையை சர்வதேசம் கண்டிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

Read More

தலைமன்னார் புனித லாரென்ஸ்ஷியர் திருக்கோவிலுக்கான வரவேற்பு வளைவை கிறிஸ்தவக்கிரமத்தின் புகுமுகவாயிலில் கட்டி பெருமையுறுவது நியாயமானதாகும்

தலைமன்னார் புனித லாரென்ஸ்ஷியர் திருக்கோவிலுக்கான வரவேற்பு வளைவை கிறிஸ்தவக்கிரமத்தின் புகுமுகவாயிலில் கட்டி பெருமையுறுவது நியாயமானதாகும்

ஜனநாயகமக்கள் முன்னணியின் பொது செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் ஆலோசனை தலைமன்னாரில் கிறிஸ்தவ இந்து முஸ்லீம் மும்மதத் தமிழர்களும் ஒருவரை ஒருவர் எந்தவகையிலும் ஆக்கிரமிக்க எண்ணாது ஒருமைப்பாட்டுடன் பெருமையாய் வாழ்வதுதான் தமிழரின் கலாச்சார மிடுக்கை கொடுக்கும் . இதை பேண வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளரும் தமிழ் தேசிய பணிக்குழு தலைவருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தெ◌hடர்பாக அவர் ஊடகங்களுக்;கு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார் இதுதொடர்பாக முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு பாலசுந்தரராஜா, எனக்கு நிலமையை விளக்கி இருந்தார், இந்துமாமன்ற தலைவர் சட்டத்தரணி நீலகண்டன் இன்று எம்மிடையே இல்லையே எனும் கவலையையும் மன்னர் இந்து மக்கள்…

Read More

“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

கடந்த 10ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கனடா உதயன் சர்வதேச விருதுவிழா -2018 ல் இந்திய சிறப்பு விருதினைப் பெறுவதற்காக வருகை தந்த புல்லாங்குழல் நவீன் அவர்கள் மறுநாள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோநகரில் உள்ள தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சியிலும் தனது திறமைகளைக் காட்டினார். சபையில் அமர்ந்திருந்த கர்நாடக சங்கீத ஆசிரியைகள் மற்றும் பிரதம விருந்தினர் வயலின் வித்துவான ஜெயதேவன் நாயர் மற்றும் சிறப்பு விருந்தினர் மிருதங்கவித்துவான் வாசுதேவன் இராஜலிங்கம் ஆகியே◌hர் நவீன் அவர்களை பாராட்டி நிற்க நிகழ்ச்சி தொடர்ந்தது.பிரதம விருந்தினர் வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் தனது உரையில புல்லாங்குழல் நவீன் அவர்களைப் பாராட்டி அவரோடு சேர்ந்து…

Read More

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக 2004-06ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி…

Read More
1 276 277 278 279 280 425