பிரான்ஸ் ஐ.எஸ். தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; பயங்கரவாதி சலாக் அப்தேஸ்லாம் விடுவிக்க கோரிக்கை
பிரான்ஸ் நாட்டின் த்ரிபெஸ் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதி புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளான். முன்னதாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போலீசாரை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயம் அடைந்து உள்ளார். சூப்பர் மார்க்கெட்டிற்குள் இருந்தவர்கள் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். பயங்கரவாதி உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியை பாதுகாப்பு படை சுற்றி வளைத்து உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தி உள்ள பயங்கரவாதி 2015-ல் தாக்குதல் நடத்தப்பட்டதில் முக்கிய குற்றவாளியான…
Read More









