இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்
இந்தியர்களின் தகவல்கள் வெளியானது என்பது தொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது. ‘பேஸ்புக்’ பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். “இந்தியர்களின்…
Read More









