“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்

“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டு, தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகளின் அளவு அண்மை காலங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டு மக்களை எந்த நேரமும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும் சூழலுக்கு ஆளாக்கிவிட்டு, அவர்கள் கவனம் முழுவதும் அதில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சென்னை,…

Read More

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா எம்இஎஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். வரும்…

Read More

மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்

மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்

போலி செய்திகள் வெளியிட்டால் 6 ஆண்டு சிறைத்தண்டனை என்ற சட்டத்திற்கு மலேசிய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.பொய்ச்செய்தி, போலிச்செய்தி என்று முத்திரையிட்டு, உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்க சட்டத்தின் மூலம் வழிவகை செய்து கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டு போடுகிறது ஆளும் மலேசிய அரசு என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.இந்தச் சட்டம் உள்நாட்டு ஊடகம் மட்டுமல்லாது அயல்நாட்டு ஊடகங்களையும் இலக்காக்கியுள்ளது. பிரதமர் நஜிப் ரஸாக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விமர்சனங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியே இந்த ‘பொய், போலிச் செய்தி சட்டம்’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.3வது முறையாக பிரதமராக நஜிப் ரஸாக் முயற்சிகள்…

Read More

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் பலரும் வரிசைகட்டி வந்து போலீஸ் ஸ்டசேனில் சரணடைந்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பெற்ற நாள் முதல் ரவுடிகள், மற்றும் கிரிமினல்கள் மீதான நடவடிக்கை இறுகியது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம் ஆண்டு 1144 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் 34 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2744 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடுமையான குற்றங்களை செய்துவரும் ரவுடிகளை அம்மாநில போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தி வருவதை அறிந்த குற்றவாளிகள் போலீஸ் நியைங்களில் சரணடைந்து வரத்துங்கியுள்ளனர். மேலும் தங்களது ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர்…

Read More

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்; கேப் டவுனின் மாற்றங்கள்

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்; கேப் டவுனின் மாற்றங்கள்

‘டே ஜீரோ’ நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு உலகில் முதல் முறையாக தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப் டவுனில் தொடர்ந்து மூன்று ஆறு ஆண்டுகளாக மழை பொழியா காரணத்தினால், அந்நகரில் இருந்த ஆறு ஏரிகளும் வறண்டு விட்டன. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக இருக்கப் போகிறதா கேப்டவுன்? சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப் டவுன் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியை சந்திந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டவுனில் நிலவும் வறட்சியை தேசியப் பேரிடராக தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்தது. ஏப்.16-ல் அந்நகரத்தில் குடிநீர் முழுவதும் தீர்ந்துபோய்…

Read More

கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். சுதா திவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலில் கருங்கல்லை வைத்து தேய்த்துள்ளார். இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.அந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற…

Read More

காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் : வட்டாள் நாகராஜ்

காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் : வட்டாள் நாகராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.,க்களின் தொடர் போராட்டம் காரணமாக பார்லி., 18 வது நாளாக இன்றும் முடங்கி உள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வட்டாள் நாகராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதற்கு எதிராக ஏப்ரல் 5 ல் கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

Read More

மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் விடியலைத் தேடி அமைப்பின் ஆதரவில் இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் அவரது அன்னை சாரதா ஆகியோர் மொன்றியால் வாழ் வர்த்தக நண்பர்கள் வழங்கிய ஒத்துழைப்போடு நடத்திய “விடியலைத் தேடி” இசை நிகழ்சசி கடந்த சனிக்கிழமை 24ம் திகதி மாலை மொன்றியால் நகரின் மேரி ஆன் உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மொன்றியால் நகரில் உள்ள ஆற்றல் மிகு பாடக பாடகிகள் மற்றும் நடன மணிகள் அத்துடன் ந◌ாடக நடிகர் ஆகியோர் மேடையில் தங்கள் படைப்புக்களைத் தந்தனர். அத்துடன்; ரொரன்ரொவிலிருந்து கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் “வைகைப் புயல்” பாலாவோடு இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சியையும் வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம…

Read More

பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

கனடாவில் மிக நீண்ட காலமாக இசைத்துறையில் அறிவூட்டல் மற்றும் மேடைநிகழ்ச்சி அத்துடன் சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் பணி ஆகியவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா” (யூனியர் சிங்கர்- கனடா) இசைப் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் (First three) முதல் மூன்று வெற்றியாளர்களையும் மேலும் மூன்று வெற்றியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் போட்டி, மண்டபம் நிறைந்த சபையோர் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதி கலைக் கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் தனது பிள்ளைகள் மூவர் மற்றும் பெற்றோர் மாணவர்கள் அத்துடன் வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவோடு…

Read More

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை,…

Read More
1 273 274 275 276 277 425