ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாக, நிபுணர்கள் கூறியதை அடுத்து, அங்கிருந்த மூன்று கழிப்பறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. ‘இதன் மூலம், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என, அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 14 ஆண்டு களாக, இங்கு, பா.ஜ., தான் ஆட்சி நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ., எதிர்க்கட்சியான, காங்கிரஸ் ஆகியவை, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள், வாஸ்து நிபுணர்களை…
Read More








