காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ

காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், வரும் ஜனவரி 28-ம் தேதி நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தான் பங்கேற்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத் தொடங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பத்து இலட்சம் ஏக்கரில்…

Read More

ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டில் ரஜினிகாந்த் தனிக்கட்சி? பரபரப்பு தகவல்

ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டில் ரஜினிகாந்த் தனிக்கட்சி? பரபரப்பு தகவல்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இறுதியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். கட்சி பெயரை அறிவிக்காமல் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதன் பெயரிலேயே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கட்சியை எப்போது அறிவிப்பார் என்று ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். இதனால் கட்சி பெயரை அறிவிப்பதில் அவர் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. 2 கோடி உறுப்பினர்கள் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பு 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து அடித்தளத்தை வலுவாக்குவது ரஜினிகாந்தின் திட்டமாக உள்ளது என்று நெருக்கமானவர்கள்…

Read More

நெருப்பை கக்குகிறது பிலிப்பைன்ஸ் எரிமலை

நெருப்பை கக்குகிறது பிலிப்பைன்ஸ் எரிமலை

பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது. மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது விரைவில் வெடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது. எரிமலை பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2006-ல் இந்த எரிமலை வெடித்த போது உயிரிழப்பு ஏதும் ஏற்பட வில்லை. ஆனால் அதே…

Read More

சென்னையை ரசிக்க இன்னும் நூறு காரணங்கள் இருக்கின்றன

சென்னையை ரசிக்க இன்னும் நூறு காரணங்கள் இருக்கின்றன

வங்க கடலின் கரையின் அமைந்துள்ள தென்னிந்தியாவின் ஆன்மா.. தென்னகத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும் ஒருங்கிணைந்த இந்தியாவின் சிறப்பு மிக்க பெருநகரம்… கோவில்கள், கடற்கரை, மியூசியங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பட்டுச்சேலைகள் என்றுஅனைத்து வயதினரையும் கவரும் இடம்… 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திராவிட பாரம்பரிய அமைப்பு கொண்ட சிவபெருமானும், கற்பகாம்பாளும் அருள் புரியும் கபாலீஸ்வரர் கோவில்… ஒரு ஏக்கர் பரப்பளவும், ஐந்து நிலை கோபுரமும் கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும், மக்களின் உடல் நோய்களை தீர்ப்பதுமான திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்… தவறாமல் தரிசிக்கவேண்டிய8-ம் நூற்றாண்டு கோவிலான, பார்த்தனுக்கு சாரதியாக கிருஷ்ணன்இருந்து தேரோட்டிய பார்த்தசாரதி கோவில்….. பெசன்ட் நகரில் பல அடுக்கு கோபுரங்கள் கொண்ட, செல்வத்தின் அதிதேவதையான மகாலட்சுமி…

Read More

கமலுக்கு வரலாறு தெரியாது: ஜெயகுமார்

கமலுக்கு வரலாறு தெரியாது: ஜெயகுமார்

சென்னை : ”தமிழகத்தில், 2001 முதல் அனைத்து துறைகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.நடிகர் கமலுக்கு, வரலாறு தெரியவில்லை என்றால், என்னிடம் போனில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்,” என,மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயகுமார் கூறினார். சமூகநலத்துறை சார்பில், சென்னை, தி.நகரில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், சென்னையில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த, 500 கர்ப்பிணி பெண்களுக்கு,ஜாதி மத பேதமின்றி, ஒன்றாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவும், சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய பைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்,மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார், சமூகநலத்துறை அமைச்சர், சரோஜா, கலெக்டர், அன்புசெல்வன்ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:தமிழகத்தில், வெளிப்படையான அரசு நடந்து…

Read More

சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது. ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது. தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ராக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது. மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப்…

Read More

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது – தினகரன்

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது – தினகரன்

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது: பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம், அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Read More

தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது

தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது

கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தி்ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 56 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இதற்கு சதி திட்டம் தீட்டியவனும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மென்பொறியாளர் அப்துல் சப்ஹான் குரோஷி ,இவரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் டில்லி காஸிப்பூரில் பதுங்கியிருந்ததையறிந்த போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் குரோஹி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சிமி, இந்தியான் முஜாகிதீன் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. கைதான குரோஷியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி…

Read More

உண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது. யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” வலியுறுத்துகின்றது

உண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது. யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” வலியுறுத்துகின்றது

வடக்கிலும் கிழக்கிலும் உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரிப் பத்திரிகை நேற்று முன்தினம் எழுதிய ஆசிரிய தலையங்கத்தை எமது கனடா உதயன் தாங்கி வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். மேற்படி “வலம்புரி” ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உள்ளூராட்சிசபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஊர் ஊராகநடைபெறும் இத்தேர்தல் பிரசாரத்தில் பலரும் களமிறங்கியுள்ளதைஅவதானிக்க முடிகின்றது. பொதுவில் உள்ளூராட்சிசபைத் தேர்தலிலில் கட்சி என்பதற்கு அப்பால்இதேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யார் என்பதுதான் முதன்மை பெறும். என் ஊரவர், என் உறவினர் ,தெரிந்தவர், உதவி செய்யக்கூடியவர் என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதன் வழி வாக்களிக்கின்ற நடை முறையே மேலோங்கி இருக்கும். இவை ஒரு புறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் யார்…

Read More

உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா?

உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா?

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆண்டாள் பக்தை. ‘ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் நல்லதல்ல; உண்ணாவிரதம் வேண்டாம்’ என வைஷ்ணவ பெரியவர்களிடம், துர்கா அறிவுறுத்தியதாகவும், தொடர்ந்து பேச்சு நடத்திய அவர்கள், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஜீயரின் உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ஆண்டாளை அவதுாறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆண்டாள் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும்’ என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் சன்னிதியின் சடகோபராமானுஜ ஜீயர்நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார். இரண்டாம்…

Read More
1 288 289 290 291 292 425