பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி

மாட்டுப் பொங்கல் தினமான இன்று பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.25 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் போட்டி தொடங்கியவுடன் முதலில் மகாலிங்க சுவாமி கோவில் காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. இதனை யாரும் பிடிக்க வில்லை. அதன்பின் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பாலமேட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று…

Read More

கர்நாடகாவின் பிடிவாதத்தால் கருகும் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள்; தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள் தான்: ராமதாஸ் கண்டனம்

கர்நாடகாவின் பிடிவாதத்தால் கருகும் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள்; தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள் தான்: ராமதாஸ் கண்டனம்

கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதால் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளும் இந்திய குடிமக்கள் தான் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பருவ நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கருகும் பயிர்களைக் காக்க காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த வேண்டுகோளை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்து விட்டார். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர்…

Read More

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ஞாநியின் உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஞாநியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக…

Read More

“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மார்க்கம்: எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக மீன் மற்றும் இறைச்சி விற்பனைப் பிரிவில் உடனடியாகப் பணியாற்றுவதற்கு மீன் இறைச்சி வெட்டுவோர் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆகியோர் தேவைப்படுகின்றார்கள். நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலதிப விபரங்களுக்கு 647 887 7242 என்னும் இலக்கத்தை அழைக்கவும். நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Read More

அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

மயிலோன் முருகனின் தலம் திறக்கும்! தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக! வருக! வருக! என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம். நிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது! நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது!. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது! ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது! புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ! பொங்கல்! என்று புன்னகைக்கும் நாள் இது! புத்தாடை அணிநது….

Read More

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கனடாவின் 150வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணமாகவும்,மறைந்த அதிபரும் ஆசானுமாகிய பொ. கனகசபாபதி அவர்களுக்கு சமர்ப்பாணமாகவும் மேற்படி நூல் வெளியிடப்பட்டன. கருத்துரைகளை திருமதிகள் கோதை அமுதன்,வாசுகி நகுலராஜா ஆகியோரும் திருவாளர்கள் பொன்னையா விவேகானந்தன்,பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரும் ஆற்றினர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பல துறை சார்ந்தஅன்பர்கள் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படிநூல் வெளியPட்டு நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதி முழுதாக ரொரென்ரோ சிறுவர் வைத்திய சாலைக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராஅறிவித்தார். இங்கே காணப்படும்…

Read More

தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

நாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே. ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக்…

Read More

ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஊழல் குற்றச்சட்டு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி பங்குபத்திரங்கள் வெளியிட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அந்த விவகாரம் குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றிக்கொண்டு இருந்த போது அதுகுறித்து விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவர் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்து டிபாசிட்டையும் பறிகொடுத்தது. இது குறித்து, கட்சியின் பல்வேறு மட்டங்களிலும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்கள் கடுமையாக உள்ளன.இதையடுத்து, ஸ்டாலின் தரப்பினர் தேர்தலுக்கு முன் என்ன நினைத்து, இடைத்தேர்தலை எதிர்கொண்டது, என்பது குறித்து, கட்சியின் பல மட்டத் தலைவர்களிடமும் எடுத்துக் கூறி வருகின்றனர்.அவர்கள் கூறி வருவதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம்தான் பிரதானம் என்பதை தி.மு.க., முன் கூட்டியே கணித்து விட்டது. அதனால், பணத்தை வாரி இறைக்கத் திட்டம் தீட்டிய மதுசூதனன் மற்றும் தினகரனோடு பணம் கொடுத்து போட்டிப் போட வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதனால்தான், கடைசி வரை, தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.எப்படி…

Read More

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ”திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,” என, பேசியுள்ளார். அதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், ‘பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின்…

Read More
1 290 291 292 293 294 425