இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ்…

Read More

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

நிதியுதவியை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களை ஏமாற்றி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குரம் தஸ்தகிர் கான் கூறியதாக அந்நாட்டு மீடியாவில் வெளியான செய்தி: ஆப்கனில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு உதவி, புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானை குறைகூறும் அமெரிக்காவுடன், கண்டிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் அமெரிக்காவிற்கு வழங்கி வந்த மிகப்பெரிய ஒத்துழைப்பை நாங்கள்…

Read More

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம் முதல் உயர்த்தப்படும் எனவும் தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் பிப்ரவரி மாதம் எம்எல்ஏக்களுக்கு நிலுவை தொகையுடன் ரூ. 3 லட்சம் கிடைக்கும். எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,…

Read More

டமாஸ்கஸ் ராணுவ முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

டமாஸ்கஸ் ராணுவ  முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் டமாஸ்கஸ் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிரியா ராணுவம் தரப்பில், “இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் சிரியாவின் டமாஸ்கஸ் புறப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் லெபனான்னிலிருந்து ஏவுகணை வீசப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் வடபகுதியிலிருந்து ஏவுகணைகள் பல வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் பொருட் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிரியா கூறியுள்ளது. ஆனால் சிரியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது. சிரியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லெபனான் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல வான் வழித் தாக்குதலை சிரியாவில் நடத்தியது…

Read More

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா வைத்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்றும் தொடர்பான சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வரும் என கூறப்பட்டது. எச்-1 பி விசா விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி…

Read More

திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்

திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்

கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் வாரம் ஒன்றிற்கு 250 ஜிபைக்குகள் காணாமல்போகும் நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இணையதள சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குவதில் முன்னணி இடத்தில் கூகுள் நிறுவனம் இருந்துவருகிறது. கூகுள் நிறுவனம், பயனாளர்களுக்கு safe browser மற்றும் டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், கலிபோர்னியா மாகாணத்தின் மவுன்டைன் வியூ பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் ஜிபைக்குகளை வழங்கியுள்ளது. ஊழியர்கள், ஆங்காங்கே ஜிபைக்குகளை நிறுத்திவிடுவதாக நிறுவனம் அவ்வப்போது குற்றஞ்சாட்டியிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அப்பகுதி மக்கள், அந்த ஜிபைக்குகளை திருடிவந்தனர். வாரம் ஒன்றி்ற்கு 250 ஜிபைக்குகள்…

Read More

How “GAADD” Is Slowly Killing North Americans

How “GAADD” Is Slowly Killing North Americans

A wise sage once remarked, “It’s not things you don’t know that gets you into trouble, it’s the things you know for sure that ain’t so!” Most doctors and patients are convinced cholesterol-lowering drugs (CLDs) prevent heart attack. I say, it ain’t so. So what may prove me right? And why is GAADD so important? Fact # One Years ago I interviewed Dr. Linus Pauling, a two-time Nobel Prize winner. He explained that animals make…

Read More

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் இயங்கும் பேருந்துகள்; பரிதவிக்கும் மக்கள்

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் இயங்கும் பேருந்துகள்; பரிதவிக்கும் மக்கள்

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. மாநிலம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அமைச்சர் பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கைக்காக பல விதமான போராட்டங்களை நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் இறுதிகட்டமாக நேற்றுமுன்தினம் நடந்த பேச்சு வார்த்தையைக் கெடுவாக வைத்தனர். 2.57 சதவீத உயர்வை தர மறுத்த தமிழக அரசு 2.4 சதவீதத்திலேயே நின்றது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல்…

Read More

நாங்கள் யாரையும் செய்தித் தொடர்பாளராக நியமிக்கவில்லை: ரஜினி மக்கள் மன்றம்

நாங்கள் யாரையும் செய்தித் தொடர்பாளராக நியமிக்கவில்லை: ரஜினி மக்கள் மன்றம்

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்று அம்மன்றம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கடந்த 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பலரும் தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில், “சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர்கள் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை கூறி…

Read More

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரஜினிக்காந்த் – கமல் சந்திப்பு

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரஜினிக்காந்த் – கமல் சந்திப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின்…

Read More
1 291 292 293 294 295 425