ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்

ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்

2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி தவறான பிரச்சாரம் நடந்தது, ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதன் மூலம். காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிருபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது “2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு…

Read More

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ராம மோகன ராவ் ஆஜர்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ராம மோகன ராவ் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முன்பு, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது. தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். இதில், திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த…

Read More

2ஜி தீர்ப்பில் அரசு உடனே மேல்முறையீடு செய்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும்: சு.சுவாமி

2ஜி தீர்ப்பில் அரசு உடனே மேல்முறையீடு செய்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும்: சு.சுவாமி

2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்து, அரசு தன்னுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஆ. ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிச. 12 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார். முன்னாள் மத்திய தொலை தொடர்புத்…

Read More

24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்

24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் வசித்து வருபவர் டினா கிப்சன் (வயது 26).  இவரது கணவர் பெஞ்சமின் கிப்சன்.  இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 25ந்தேதி எம்மா ரென் என்ற பெண் குழந்தை பிறந்தது.  எம்மா ரென் பிறந்த பின் 6 பவுண்டுகள் எடையுடன் 20 இஞ்ச் நீளமுடன் இருந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், எம்மா ரென் பிறப்பதற்கு 24 வருடங்களுக்கு முன் அதன் கரு உருவாகியுள்ளது. அதன்பின்னர் அது நீண்ட காலம் உறை நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி தேசிய கரு தான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 1992ம் ஆண்டு முதல் எம்மாவின் கரு பாதுகாக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், உறை நிலையிலான கரு இந்த வருட…

Read More

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசடி தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, ராஜா உட்பட பலர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் வீடு, கலைஞர், ‘டிவி’ வட்டாரங்களில் பீதி நிலவுகிறது. முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை…

Read More

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டபின் – தேறுதல் கமிசன் உத்தரவின்படி வீடியோ நீக்கபப்ட்டது

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டபின் – தேறுதல் கமிசன் உத்தரவின்படி வீடியோ நீக்கபப்ட்டது

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் இன்று( டிச., 20) வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தபடி பழச்சாறு அருந்துவது போன்ற பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ, 20 வினாடிகள் ஓடும் வகையில் உள்ளது. 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இந்த வீடியோ அதிகாரபூர்வமானது அல்ல என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில்,…

Read More

‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி

‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர்  பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி

ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர்  பெரிய பாண்டியன் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி பானுரேகா கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர்  பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சாலைபுதூரில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் எனது கணவர் பெரியபாண்டியனும் இருந்தார். கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எனது கணவர் மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 3…

Read More

இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

திருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை வதையொட்டி  இங்கு சனிப் பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா நேற்று இரவு முதல் தொடங்கியது. சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம்…

Read More

ஆர்.கே.நகர் யாருக்கு?- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

ஆர்.கே.நகர் யாருக்கு?- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரங்கள் அனல் பறந்தாலும் ஆர்.கே.நகரில் யார் வெல்வார் எனபது கேள்விக்குறியாக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி 1977 முதல் சட்டப்பேரவை தொகுதியாக உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும் நேரடி போட்டியில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிமுக, திமுக கூட்டணியில் தலா ஒருமுறை வென்றுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் அதிமுக வசமே ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது. 2001-ம் ஆண்டு சேகர் பாபு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2006-ம் ஆண்டும் அவரே வென்றார். 2011-க்குள் அவர் திமுகவில் சேர்ந்தார். 2011…

Read More

We need More Love in the Christmas Stocking-The Doctor Game – W. Gifford-Jones M.D

We need More Love in the Christmas Stocking-The Doctor Game – W. Gifford-Jones M.D

What does this world need more than anything else this Christmas? It needs gifts of love, empathy, civility, less hatred, less poverty and less environmental pollution, destruction of guns and missiles before it becomes too late. It needs a mindful civilization that cares about every human being. And it must start with individual families and end with politicians throughout the world who control nuclear weapons. I enjoy the festivities of the Christmas season. For a…

Read More
1 295 296 297 298 299 425