கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா?- வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா?- வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு திட்டத்துக்கான வேலைகளில் ஈடுபட முயன்றதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் அறப்போராட்டம் நடத்தினர். இந்நிலையில், காவல்துறை அடக்குமுறையை ஏவியது. மேலும், இத்தகைய திட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது அபாண்டமாகப் பொய் வழக்குப் போட்டு தமிழக காவல்துறை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. ஜெயராமன் உள்ளிட்டோரை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை, நேற்று 10 பேர் மீது…

Read More

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும்

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதைக் கண்டித்து திரையரங்குகள் மூடப்பட்டிருகின்றன. ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு காரணமான தமிழக அரசின் புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 35 சதவீதம் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கேளிக்கை…

Read More

அ.தி.மு.க. அணிகள் இணைகிறது கட்சியை வழி நடத்த ஓ.பி.எஸ். தலைமையில் 7 பேர் குழு?

அ.தி.மு.க. அணிகள் இணைகிறது கட்சியை வழி நடத்த ஓ.பி.எஸ். தலைமையில் 7 பேர் குழு?

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மறைந்தபோது எவ்வாறு கட்சி பிளவுபட்டு நின்றதோ, அதேபோல் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. 3 பிரிவாக உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் (அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா), முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் (அ.தி.மு.க. அம்மா) உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்தது. அதேபோல், இப்போதும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. முதலில், திரை மறைவுக்கு பின்னாலேயே 2 அணி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில், சசிகலா…

Read More

ஜிஎஸ்டியால் திரைத்துறைக்கு பாதிப்பு; நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது தீர்வாகாது: நடிகர் சரத்குமார் கருத்து

ஜிஎஸ்டியால் திரைத்துறைக்கு பாதிப்பு; நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது தீர்வாகாது: நடிகர் சரத்குமார் கருத்து

ஜிஎஸ்டியால் திரைப்படத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உச்ச நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க கோரிக்கை விடுப்பது பிரச் சினைக்கு தீர்வாகாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகரு மான சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சரத்குமார், தமது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தளக்காவூர் உசுலாகுடிக்கு நேற்று வந் திருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டியால் குழப்பமான சூழ் நிலை உள்ளது. ஒரே வரி என்பது சிறப்பான திட்டமாக இருந்தாலும், மக்களை சரிவர சென்றடைய வில்லை. சில இடங்களில் வர்த் தகம் ஸ்தம்பித்துள்ளது. திரைப் படத் துறையில் வரிவிதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாநில அரசு 30 சதவீதம், மத்திய அரசின்…

Read More

புதுமைக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கிருஷ்ணா நேர்காணல்

புதுமைக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கிருஷ்ணா நேர்காணல்

‘‘என் முதல் படத்தில் இருந்து இதுவரை ஒரு ரசிகனின் மனநிலையில் இருந்தே கதை கேட்டு நடித்து வருகிறேன். அதேபோல, தற்போதைய சினிமாவின் போக்கை பார்க்கும்போது முடிவில் கதை மட்டும்தான் ஜெயிக்கிறது. கதையை நம்புவதால்தான் ஒரே நேரத்தில் சோலோ ஹீரோவாகவும், இரட்டை ஹீரோக்கள் படத்திலும், மல்டி ஸ்டார்ஸ் படங்களிலும் கவனம் செலுத்த முடிகிறது’’ என்கிறார் கிருஷ்ணா. விரைவில் வெளிவரும் ‘பண்டிகை’ படத்தைத் தொடர்ந்து ‘கிரகணம்’, ‘வீரா’, ‘விழித்திரு’, ‘களரி’ என்று அவரது நடிப்பில் வரிசையாக படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கின்றன. அவருடன் ஒரு நேர்காணல்.. திருவிழா, பண்டிகை என்றால் கொண்டாட்ட மான மனநிலை இருக்கும். நீங்கள் நடித்த ‘பண்டிகை’ படத்தின் டிரெய்லர், போஸ்டர்களை பார்க்கும்போது ஆக்‌ஷன் களம்…

Read More

படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

ஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை அதிகாரிக்காததன் காரணத்தை விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். தணிக்கையில் ’ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். ‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் “நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும், ஏன் பெரியளவுக்கு சம்பளத்தை அதிகரிக்கவில்லை” என்ற கேள்விக்கு கூறியிருப்பதாவது: மாதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உடம்பைக் குறைத்தீர்கள் என்று கேட்டேன். ‘திருப்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், உணவைக் குறைத்தேன் என்றார். நானும் திருப்தி என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறேன். என் படங்கள் பெரிய வெற்றியடைய…

Read More

முக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்: தோல்விக்குப் பிறகு கோலியின் வழக்கமான பேச்சு

முக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்: தோல்விக்குப் பிறகு கோலியின் வழக்கமான பேச்சு

சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை நமக்கு சூசகமாகக் காட்டியதை பாகிஸ்தான் 90% காட்டியது, நேற்று மே.இ.தீவுகள் மீதமுள்ள 10%-ஐயும் காட்டி இந்திய அணியின் நட்சத்திர அந்தஸ்த்தை கேள்விக்குட்படுத்தியது. குறைந்த இலக்கை விரட்ட முடியாமல் தோல்வி கண்டது இந்திய அணி. இதே தோல்வியை மைக்கேல் கிளார்க், ஸ்மித், அல்லது மோர்கன், டிவில்லியர்ஸ் என்று யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள், கடுமையான வார்த்தைகளால்தான் இந்தத் தோல்வியை அறுதியிடுவார்கள். “இப்படிப்பட்ட ஆட்டம் பற்றி கூறுவதற்கென்ன இருக்கிறது?, படுமோசமாக ஆடினோம்” என்று வெளிப்படையாக கூறுவார்கள். ஆனால் இந்திய மனம் இதனை ஏற்றுக் கொள்ளாது, மோசமாக எது நடந்தாலும் ஒன்றுமே ஆகாதது போல் காண்பித்துக் கொண்டு இந்த மேலோட்டமான மனநிலையையே ஏதோ தன்னம்பிக்கை, ஆக்ரோஷம்,…

Read More

விக்கெட் கீப்பராக ரன்களில் தன்னைக் கடந்த தோனிக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து

விக்கெட் கீப்பராக ரன்களில் தன்னைக் கடந்த தோனிக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் எடுத்த ரன்களில் கில்கிறிஸ்டின் 15,461 ரன்களை தோனி கடந்துள்ளார். இந்தச் சாதனை முறியடிப்புக்காக ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி பேட்ஸ்மென்/ விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்று 4-வது ஒருநாள் போட்டியில் தோனி கடந்த 16 ஆண்டுகளில் மிக மிக மந்தமான அரைசதத்தை எடுத்து எதிர்மறை விமர்சனத்துக்குள்ளான இன்னிங்ஸில் 54 ரன்களை எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 15,481 ரன்களை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் 9,496, டெஸ்ட் போட்டிகளில் 4,876, டி20 போட்டிகளில் 1209 ரன்கள். இந்நிலையில் பாராட்டு தெரிவித்த கில்கிறிஸ்ட், தனது சமூக வலைத்தளத்தில், “என் சாதனையை கடந்ததற்கு வாழ்த்துக்கள்,…

Read More

தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ‘தாமிரபரணி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி’ நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நெல்லையை அடைந்தது. நேற்று காலை நெல்லையில் இருந்து தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வந்தது. அங்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தாமிரபரணியை பாதுகாக்குமாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஸ்ரீவைகுண்டம் அணையை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வட தமிழகத்தில் இருந்து வந்துள்ள நான் இங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது…

Read More

ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்: நாஞ்சில் சம்பத் தகவல்

ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்: நாஞ்சில் சம்பத் தகவல்

அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒருமணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அறிமுகப்படுத் தியுள்ள ஜிஎஸ்டியால் மாநிலத்தின் உரிமை பறி போயுள்ளது என்பது உண்மை. ஜிஎஸ்டியில் பல சிக் கல்கள் உள்ளன. இதற்கு எதிராக…

Read More
1 331 332 333 334 335 425