சரக்கு, சேவை வரியால் பிரச்சினை இல்லை; தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம்
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகின்றன. தியேட்டர் உரிமையாளர்களின் இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசின் சரக்கு, சேவை வரி காரணம் இல்லை. சினிமா டிக்கெட்டுக்கு மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததால்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் ஆகும். மத்திய அரசின் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஒரு…
Read More









