தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன்

தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும்  கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA  மதன்

ஈழத்தமிழர்கள் தமிழ் மொழியையும் தங்கள் தேசத்தையும் நன்கு நேசித்தவர்கள். கல்வியிலும் கலைகளிலும் உயர்ந்த பயிற்சியையும் உன்னதமான ஆற்றலையும் கொண்டு வாழ்வில் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நாட்டை விட்டு ஓடி விடவேண்டும் என்ற சிந்தனையும் எம்மவர்களுக்கு இல்லாமல் இருந்த காலத்தில், உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சில தமிழர்கள் அங்கு உயர் பதவிகளைப் பெற்று தமிழர்களினதும் தமிழ் மொழியினதும் அடையாளத்தை பதித்த வரலாறு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. ஆனால் இலங்கையில், போரும் போராட்டமும், தமி;ழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமான பின்னர் அங்கு கல்வியும் கலைகளும் வர்த்தகமும் விவசாயமும் தொழில்நுட்பமும் தமிழர்களுக்கு கைகொடுக்க மறுத்தன. கற்றும் உழைத்தும் கரைகண்ட மேற்படி துறைகளில் அவர்களுக்கு வெற்றிகளை…

Read More

கதிராமங்கலத்தில் மயங்கி விழுந்தார் வைகோ

கதிராமங்கலத்தில் மயங்கி விழுந்தார் வைகோ

கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடையில் இருந்து மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பேரணியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதற்குப் பிறகு மேடையில் ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ…

Read More

ஓ.பன்னீர் செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது பதற்றம் அதிரடிபடை குவிப்பு

ஓ.பன்னீர் செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது பதற்றம் அதிரடிபடை குவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்ªசல்வத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 200 அடி ஆழத்தில் ராட்சத கிணறுகள் தோண்டப்பட்டது. இதனால் அருகில் உள்ள கிணறுகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் வெட்டப்பட்ட கிணற்றை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதனை மூட வேண்டும் எனவும் தெரிவித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகள் சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஓ.பி.எஸ். தோட்டம் உள்ள பகுதியை அளந்து சர்வே செய்தனர். தொடர்ந்து லெட்சுமிபுரம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நேற்று இரவு…

Read More

ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா?- தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை

ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா?- தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் உள்ளனரா என மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது என்ற இளைஞரை, அம்மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால், ஐஎஸ் இயக்கத்துக்கு நிதி உதவி செய்திருப்பதாக புகார் எழுந்தது. அவர், ஏற்கெனவே தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த…

Read More

ரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA நிறுவனம்.

ரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA  நிறுவனம்.

உங்கள் பாதுகாப்பின் முன்னோடி Tekno media நிறுவனம் யூலை மாதம் 6ம் திகதி மாலை 7:30மணியளவில் கனடா பிரம்டன் மாநகரில் அமைந்திருக்கும் Tekno media காட்ச்சி அறையில் மிகவும் அமைதியான முறையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண மாநாட்டிற்கு அன்பளிப்பாக $25000 கனடிய டாலர்கள் வழங்கினார்கள்,இலங்கைப் பணத்தில் சுமார் Rs.30 இலட்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிரம்டன் கற்பக வினாயகர் கோவிலுக்கு $4,000 டொலர் நிதியுதவியும், பிரம்டன் ஈழம் சாவடி நிகழ்விற்கு $5,000 டொலர்கள் நிதியுதவியும் வழங்கினார்கள். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய…

Read More

கனடாவின் “நட்சத்திரா” இசைக்குழுவினர் நடத்தும் பாராட்டு விழா

கனடாவின் “நட்சத்திரா” இசைக்குழுவினர் நடத்தும் பாராட்டு விழா

கனடாவில் கடந்த நான்கு வருடங்களாக இயங்கிவரும் “நட்சத்திரா” இசைக்குழுவினர் கனடியப் பாடகர் திரு ஜெயராஜ் கணபதிப்பிள்ளையின 25 வருட இசைத்துறை பங்களிப்பை மெச்சியும் கௌரவித்தும் நடத்தும் பாராட்டு விழா எதிர்வரும் யுலை மாதம் 15ம் திகதி மாலை 5.30 மணிக்கு ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பல்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பெரியோர்கள் மற்றும் கல்விமான்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த பாடகர்கள் இசையாசிரியர்கள் இசைக்கருவிகளில் ஆற்றல் மிகுந்த விற்பன்னர்கள் நண்பர் மற்றும் ஊடகவியல◌ாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து பாடகர் திரு ஜெயராஜ் கணபதிப்பிள்ளை அவர்களின் சேவையினைப் பாராட்டும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

Read More

யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் இயக்கத்தின் தலைமையகத்தைக் கொண்ட கனடாவிலும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தைக் கொண்ட ஜேர்மனி நாட்டிலும் தமிழ் நாட்டிலும், மாநாடு நடைபெறவுள்ள யாழ்ப்பாணத்தில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளையாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மாநாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்துவருவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜேர்மனி வாழ் அன்பர் சர்வதேச கிளைகளின் தொடர்பாளர் திரு இராஜசூரியர் இராமநாதனாலும் மேற்கொள்ளப்ப்டுகினறது .இந்த வேளையில் மேற்படி மாநாட்டை யாழ்பபாணத்தில் நடத்துவதற்குரிய முழுச் செலவில் பெரும்பகுதியை எமக்குத் தந்துதவிய கனடாவாழ் அன்பர் வர்த்தகப் பெருந்தகை கொடையாளி,…

Read More

புதுமுக நடிகர்களுடன் பிரபுசாலமன் உருவாக்கும் ‘கும்கி 2’

புதுமுக நடிகர்களுடன் பிரபுசாலமன் உருவாக்கும் ‘கும்கி 2’

பிரபுசாலமன் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க ‘கும்கி 2’ உருவாக உள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, பிரபுசாலமன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது அப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை தனது இயக்கத்தில் வரவேற்பைப் பெற்ற ‘கும்கி’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் இல்லாமல் முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாக்க முடிவு செய்துள்ளார். முழுக்க காதல் கதையாக இருந்தாலும், கதையின் மையக்கரு யானையை வைத்திருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ‘கும்கி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இதற்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்….

Read More

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம்

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம்

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். ஜிஎஸ்டி வரித் தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருவதால், ஜூலை 7-ம் தேதி வெளியீடாக இருந்த ‘விக்ரம் வேதா’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்துள்ள பேட்டியில் மணிரத்னத்துக்கு அவருக்கும் இடையேயான நட்பைப் பற்றி தெரிவித்துள்ளார். அதில் மாதவன் கூறியிருப்பதாவது: அவரோடு பல படங்கள் செய்துவிட்டேன். அனைவருமே அவரை மணி என்று தான் அழைப்பார்கள். என்னால் அப்படி அழைக்க முடியவில்லை. நான் யோசிக்கும் போது கூட மணியிடம் என்ன…

Read More

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் ஆர்ப்பாட்டம்: விசிக பங்கேற்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் ஆர்ப்பாட்டம்: விசிக பங்கேற்பு

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் தலைமையில் செயல்படும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் நீட் நுழைவுத் தேர்வு குறித்து, கடந்த 04.07.2017 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மமக, இ.யூ.மு.லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக்கோரி தமிழக…

Read More
1 330 331 332 333 334 425