பிரதமர் மோடியை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கமணி

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கமணி

அரசியல் பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை, தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.   தமிழகத்தில் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணிக்கு மத்திய பாஜகவின் ஆதரவு இருப்பதாக கருதும், முதல்வர் பழனிசாமி அணி தானும் அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் மதிய உணவு இடைவேளையில் சந்தித்து மனு அளித்தார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களி்ன் முதல்வர்கள் பிரதமரை சந்தித்து பேசிய நிலையில், தமிழக முதல்வரால் தனிப்பட்ட…

Read More

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருவதால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இரு அணிகள் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு பல நாட்களாகிவிட்டன. ஆனால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது மட்டுமே நடக்கிறது. இரு தரப்புக்கும் இடையில் கருத்து மோதல் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ எஸ்.செம்மலை பேசும் போது, எதிரணியில் இருந்து 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். “நாங்கள் வந்துவிடு கிறோம். இந்த ஆட்சியை கலைத்துவிடாதீர்கள். ஓபிஎஸ் முதல்வராக இருக்கட்டும் என் கின்றனர்” என்றார். இந்நிலையில், நேற்று காலை மெரினா நீச்சல்குளத்தில்…

Read More

கீழ் கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை

கீழ் கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழகத்தில் கீழ் கோர்ட்டுகளில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் தீர்ப்புகளை எழுதலாம் என சென்னை ஐகோர்ட்டு கடந்த 1994-ம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கைக்கு எதிராக, கடந்த 2014-ம் ஆண்டு சோலை சுப்பிரமணியன் என்பவர், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மூத்த வக்கீல் ரத்தினம் என்பவர் மதுரை கிளையில் 2015-ம் ஆண்டு மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மனு இந்நிலையில், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்…

Read More

ராயப்பேட்டையில் புதிய காவல் நிலையம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ராயப்பேட்டையில் புதிய காவல் நிலையம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், குடியிருப்புகள், மேம்பாலங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார். இதேபோல் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.   இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ராயப்பேட்டை காவல் நிலையம் சென்னை அடையாறு, பசுமைவழி சாலையில் அமைந்துள்ள பொதிகை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 4 அரசு மாளிகைகள் என மொத்தம் ரூ.155 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டிலான பொதுப்பணித்துறை திட்டங்களை முதல்–அமைச்சர் தொடங்கிவைத்தார்.   இதேபோல் சென்னை திருவொற்றியூரில் 32 குடியிருப்புகள் உள்பட ரூ.41 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 363 காவலர்…

Read More

‘ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்கள் பக்கம் வர முயற்சி செய்கிறார்கள்’; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

‘ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்கள் பக்கம் வர முயற்சி செய்கிறார்கள்’; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள அண்ணா நீச்சல் குளத்தில் உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– வந்தால் நல்லது கேள்வி:– இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது? பதில்:– ஏற்கனவே பலமுறை இதுகுறித்து சொல்லி இருக்கிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய அந்த மனப்பக்குவத்துடன் தான் கட்சியிலும், ஆட்சியிலும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற அடிப்படையிலும், யாரையும் இழக்கக்கூடாது…

Read More

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா தூங்காவி கிராமத்தைச் சேர்ந்த டி.விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– மதுபான கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நெடுஞ்சாலைக்கு அருகே இருந்த டாஸ்மாக் மதுபான கடையை, தூங்காவி கிராமத்துக்குள் இடம் மாற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருக்கிறார். தற்போது புதிதாக திறக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடை அருகே, பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

Read More

சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்

சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ரூ.300 கோடி தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மணல் கொள்ளை சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கைநீட்டி பணம் வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அந்த குறிப்பேட்டில் உள்ள கணக்குகளின்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.   சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்…

Read More

சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் தமிழகத்தில் விரைவில் தேர்தல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தகவல்

சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் தமிழகத்தில் விரைவில் தேர்தல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தகவல்

தமிழகத்தில் சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா (ஓபிஎஸ்) அணி சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:   அதிமுக அணிகள் இணைந்து செயல்பட, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என 2 கோரிக்கைகளை முன்வைத்தோம்.  அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரால் 2 அணிகளின் இணைப்பை நிறைவேற்றவும் மற்றும் தடுக்கவும் முடியாது. சசிகலாவின் ஆதரவில் பதவிகள் வாங்கிய இவர்கள், அவருக்கு…

Read More

தமிழகம் முழுவதும் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல் வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   விருதுநகர் மாவட்டத்தில் ரூ.18 கோடியே 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 125 காவலர் குடி யிருப்புகள், 3 காவல் நிலையங் களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல் வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். சென்னை மாநகர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, நெல்லை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங் களில் ரூ.41 கோடியே 72 லட்சத்தில் 363 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன….

Read More

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை…

Read More
1 348 349 350 351 352 425