ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தங்களது அணியை பலப்படுத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு
சென்னை கொட்டிவாக்கத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது அணியை பலப்படுத்துவதற்காக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அ.தி.மு.க. அணிகள் அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற மற்றொரு அணியும் தற்போது செயல்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷனில் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க இந்த 2 அணிகளும் இணைய முடிவு செய்தது. 2 அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் குழுவும், அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில்…
Read More









