ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 7 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டது. 52-வது லீக் ஆட்டம் 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா…

Read More

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:– அனைவரும் வரவேற்பு பிளஸ்–2 பொதுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். அதன் முன்னோட்டமாகதான் இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக பிளஸ்–2 தேர்வு முடிவு 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு செல்போன் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையும். ரேங்க் முறை இருந்தபோது பெரும்பாலான கல்லூரிகள் அதை பயன்படுத்தி மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தன. ஒரு மதிப்பெண் குறைந்து…

Read More

தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்து ஆனது. ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, மத்திய அரசின் ஊரக மின் மயமாக்கல் கழக தலைவர்–மேலாண்மை இயக்குனர் பி.வி.ரமேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நிதி உதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம். சாய்குமார்,…

Read More

பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2 ஆக உடைந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரு அணிகளும் தினந்தோறும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்தநிலையில், திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்தவருமான க.பாண்டியராஜன், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதில் அமைச்சர் ஜெயக்குமார் முட்டுக்கட்டை போடுகிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த கருத்து சிறந்த நகைச்சுவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பதிலடி…

Read More

இரட்டை இலை சின்னம் பெற ஓபிஎஸ் அணி சார்பில் 12,600 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னம் பெற ஓபிஎஸ் அணி சார்பில் 12,600 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி சார்பில் நேற்று 12 ஆயிரத்து 600 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. எனவே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரு பிரிவினரும் தனித்தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் ரத்தான நிலையில், இரு தரப்பையும் கடந்த மாதம் 17-ம் தேதி சின்னம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சசிகலா தரப்பு…

Read More

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 நாளில் ரூ.750 கோடி வழங்கப்படும்: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் வேண்டுகோள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 நாளில் ரூ.750 கோடி வழங்கப்படும்: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் வேண்டுகோள்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.500 கோடி யும், தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.250 கோடியும் அடுத்த 3 நாட்களில் பிரித்து வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் அவர் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குதல் தொடர் பாக தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த…

Read More

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனை ஜூன் 8-ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்- வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனை ஜூன் 8-ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்- வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனை வரும் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த ஏதுவாக அவ ருக்கு சிறை மாற்று வாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1996-97 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறையினர் 2 வழக்கு களை பதிவு செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்குகள் எழும்பூர் 2-வது பொரு ளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதில் ஒரு வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டு கடந்த மாதம் பதிவு செய்யப்பட்டு விட்டது. மற்றொரு வழக் கில் குற்றச்சாட்டு இன்னும் பதிவு செய் யப்படவில்லை. இந்த வழக்கு இரு…

Read More

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார் ,1979 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை கள் அரசியற்ற தீர்வாகாது என் வலியுறுத்தி தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக தனது தலைவர் குமார் பொன்னம்பலத்தோடு காத்திரமான பேச்சாளராக அரசியற் களமிறங்கியவர் . பல்வேறு சர்வகடசி மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் . இறுதியாக இடம்பெற்ற அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் (APRC) ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளராக ஜனநாயக மக்கள் முன்னணி யின் சார்பாக தொடர்ச்சியான பங்களிப்பை அறிக்கை ஆவணமாக பூரணமாகும் வரை…

Read More

சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை

சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை

தமிழ்நாடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2017 இல், சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் பெயரில் “உலகத் தமிழர் படைப்பரங்கம்” இந்த நற்காரியத்திற்கு வித்திட்ட, மரியாதைக்குரிய திரு ஸ்டாலின் குணசேகரனுக்கு கனடா உதயன் நிறுவனம் உ லகத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றது. மக்களுக்காகச் சிந்திப்போம் என்று அறைகூவலோடு 13வது ஆண்டாக நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா-2017 வெற்றி பெற கனடா உதயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

Read More

டாஸ்மாக் பிரச்சினை: கிராம சபை தீர்மானத்தை ஆதரிக்கும் நீதிமன்ற உத்தரவு; திருநாவுகரசர் வரவேற்பு

டாஸ்மாக் பிரச்சினை: கிராம சபை தீர்மானத்தை ஆதரிக்கும் நீதிமன்ற உத்தரவு; திருநாவுகரசர் வரவேற்பு

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் வரவேற்றுள்ளார்.   இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.   தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளுக்கு பதில் குடியிருப்பு பகுதிகளில் மாற்று கடைகள் அமைக்க அரசு முயற்சிப்பதை…

Read More
1 347 348 349 350 351 425