தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு போன்ற விஷயங்களால் அதிமுக சசிகலா அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஓபிஎஸ் கூறும்போது,…

Read More

முதல்வர், அமைச்சர்களுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனை: அதிமுக அணிகள் இணைவதாக தகவல்

முதல்வர், அமைச்சர்களுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனை: அதிமுக அணிகள் இணைவதாக தகவல்

அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சி யில் ஓபிஎஸ் சசிகலா ஆகிய இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணை யத்தின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வீட்டில்…

Read More

பிரிந்த அணிகள் மீண்டும் இணைய ஏற்பாடுகள் தீவிரம்: அதிமுகவில் சசிகலா குடும்பத்தை நீக்க முயற்சியா?

பிரிந்த அணிகள் மீண்டும் இணைய ஏற்பாடுகள் தீவிரம்: அதிமுகவில் சசிகலா குடும்பத்தை நீக்க முயற்சியா?

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர் பாக மற்ற அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் இவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்ப தாக தகவல்கள் வெளியாகியுள் ளன. இந்த பரபரப்பான சூழலில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக தினகரன் இன்று பெங்களூரு செல்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தற்போது அதிமுக அம்மா அணி (சசிகலா), அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி (ஓ.பன்னீர்செல்வம்) என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் பெயர், சின்னம், இணையதளம் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. கட்சி, சின்னம்…

Read More

சசிகலா அதிருப்தி தினகரனை சந்திக்க மறுப்பு?

சசிகலா அதிருப்தி தினகரனை சந்திக்க மறுப்பு?

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, உள்ளிட்ட அடுத்தடுத்த நெருக்கடிகளால் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த அ.தி.மு.க. அம்மா பிரிவு துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை 6.30 மணிவரை அவர் பெங் களூரு சிறைக்கு வரவில்லை. சசிகலாவையும் சந்திக்க வில்லை. வேலூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அவரால் உரிய நேரத்தில் பெங்களூர்…

Read More

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார், ஆனால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம். ஸ்காட்லாந்து யார்டு மல்லையா கைது குறித்து தெரிவிக்கும் போது, “மெட்ரோபாலிட்டன் போலீஸின் நாடுகடத்தல் பிரிவு இன்று காலை நாடுகடத்தல் வாரண்டில் உள்ள நபரை (மல்லையா) கைது செய்தது. இந்திய அதிகாரிகள் கோரிக்கைக்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியது. மேலும், “செண்ட்ரல் லண்டன் போலீஸ் நிலையத்திற்கு இவர் வந்த பிறகு கைது செய்யப்பட்டார். வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் படுத்தப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஊடக ஊதிப்பெருக்கல் என்று ட்வீட் செய்த மல்லையா, “எதிர்பார்த்தது போலவே நாடுகடத்தல் மீதான விசாரணை இன்று…

Read More

அ.தி.மு.க. அணிகள் இணைய ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர் பலி

அ.தி.மு.க. அணிகள் இணைய ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர் பலி

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் சொர்ணம் (வயது 65). அ.தி.மு.க. தொண்டர். அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த 15-ந்தேதி அவர் சென்னை வந்தார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்த அவர் அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சொர்ணம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Read More

டெல்லி போலீஸ் விசாரணை டி.டி.வி.தினகரன் கைது ஆவாரா? டெல்லி வக்கீலும் சிக்குகிறார்

டெல்லி போலீஸ் விசாரணை டி.டி.வி.தினகரன் கைது ஆவாரா? டெல்லி வக்கீலும் சிக்குகிறார்

அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டுள்ளதால் அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது.“இரட்டை இலை” சின் னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் சசிகலா தலைமையிலான அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு தரப்பினரும் ஆவணங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் “இரட்டை இலை” சின்னத்தை பெற அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நேற்று அதிகாலை சுகேஷ் சந்திர சேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது. அவர் டெல்லி போலீசாரிடம்…

Read More

முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் டிடிவி தினகரன் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: . ”எங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓபிஎஸ்ஸிடம் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்கள் தான் எங்களிடம் பேச வர வேண்டும். ஆனால், சில அமைச்சர்கள் அவர்களது சுயநலனுக்காக கூட்டம் நடத்துவது ஏற்க முடியாது. என்னைப் போன்றவர்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. எதற்காகவும், யாரிடமும் மண்டியிட மாட்டோம். ஓபிஎஸ் அணியுடன் பேச்சு நடத்த அமைச்சர்கள் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. அதுபற்றி…

Read More

இரு அணிகள் மீண்டும் இணைகிறதா?- நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என்கிறார் ஓபிஎஸ்

இரு அணிகள் மீண்டும் இணைகிறதா?- நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என்கிறார் ஓபிஎஸ்

இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச்சின்னம் எங்கள் அணிக்குதான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இதுதொடர்பாக மற்ற அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் இவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டன. இந்நிலையில், கட்சி சின்னம் பெற தினகரன் லஞ்சம் வழங்கியதாக…

Read More

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு; இடைத்தரகர் கைது

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு; இடைத்தரகர் கைது

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், லஞ்சம் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரின் பெயர் சுகேஷ் சந்திரசேகரா என்றும் அவரிடமிருந்து பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீஸில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்), சுகேஷ் சந்திரசேகரா மீது லஞ்சம் மற்றும் சதி குற்றச்சாட்டுகளும் டிடிவி.தினகரன் மீது லஞ்சப் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.1.5 கோடி சிக்கியது: டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை போலீஸார்…

Read More
1 357 358 359 360 361 425