அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றுக: அன்புமணி

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றுக: அன்புமணி

தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவப் பொது நுழைவுத் தேர்வான நீட்டிலிருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்களிக்க முடியாது என்று…

Read More

டெல்லியில் சேலை அணிந்த தமிழக விவசாயிகள் ‘தாலி அறுத்து’ போராட்டம்

டெல்லியில் சேலை அணிந்த தமிழக விவசாயிகள் ‘தாலி அறுத்து’ போராட்டம்

டெல்லியில் இன்று (சனிக்கிழமை) சேலை அணிந்த ஆண் விவசாயிகள் ‘தாலி அறுக்கும்’ போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியோரின் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினர். டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 33-வது நாளை நிறைவு செய்துள்ளது. இது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளன. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு…

Read More

சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்: டி.டி.வி. தினகரன்

சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்: டி.டி.வி. தினகரன்

சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் கூறியுள்ளார். சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று (சனிக்கிழமை) திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டி.டி.வி. தினகரன் தஞ்சை சென்றுள்ளார். மகாதேவன் மரணம் குறித்து டி.டி.வி தினகரன் கூறும்போது, “மகாதேவன் மரணம் குறித்து சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்” என்று கூறினார்.

Read More

மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?

மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?

சசிகலா 2வது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி. மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 47, தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது. தற்போது அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக பதவி வகித்து பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளதால், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்மாமா மகன் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் தஞ்சை செல்கிறார். மகாதேவன் மரணம் குறித்து பெங்களூரு சிறையில்…

Read More

இந்த வார (13/04/2017) இ-பேப்பர்

இந்த வார (13/04/2017) இ-பேப்பர்

இந்த வார (13/04/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

காரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா

காரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா

காரைநகர், இடைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், கொழும்பில் பிறந்து வளர்ந்து தற்போது சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். கணக்கியல் துறையில் தலைமை நிதி அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழிலும் சைவத்திலும் தணியாத பற்றுடையவர். புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடமும் அறிஞர் இ. இரத்தினம் அவர்களிடமும் இளமையிலே தமிழ் கற்றவர். பின்னர் பேராசிரியர் இராசு வடிவேலு அவர்களிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்றவர். யாப்பிலக்கணத்திற்கு அமைய பல மரபுக் கவிதைகளைப் படைத்துள்ள இவர் தமது மரபுக் கவிதைகள் அடங்கிய ‘எழில் பூக்கள்’ என்ற நூலையும் அந்தக் கவிதைகளை பிரபல தென்னிந்தியத் திரை இசைப் பாடகர்களின் குரலில் வடிவமைத்த இசைப்பாடல் இறுவெட்டையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 16 ஆம்…

Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தி;ன் பட்டதாரியான இவர் அங்கு சிரேஸ்ட கணித விரிவுரையாளராகவும் விஞ்ஞான பீடாதிபதியாகவும் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரி பழைய மாணவரான இவர் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப-வேந்தரும் உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் துரைராஜா காலத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தாய்ச்சங்கத்தில் பல பதவிகளை வகித்து வந்தவர் ஆவார். பல கல்விமான்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட இந்த உப- வேந்தர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவரும் தகுதியானவருமான போராசிரியர் எஸ். சற்குணராஜா நியமனம் பெற்றுள்ளமை, உலகெங்கும்…

Read More

எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்

எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்

சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்  நவம் அவர்கள் 2017-04-12 அன்று   மட்டக்களப்பில் காலமானார். எமது கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக பல கட்டரைகளை எழுதி வந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் லீலாவதி அவர்களின் அன்புக்கணவரும், இந்துமதி (அமெரிக்கா), முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா), நளாயினி,( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்ஃ. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று  மட்டக்களப்பில் இடம்பெறும். தொடர்புகளுக்கு:- 01194766983738

Read More

தனி மனிதர்களிடம் தங்கியுள்ள நிதி தாயகம் நோக்கி விரிய வேண்டும்

தனி மனிதர்களிடம் தங்கியுள்ள நிதி   தாயகம் நோக்கி விரிய வேண்டும்

எமது மண்ணின் விடுதலைக்காக தமது கைகளில் ஆயதங்களை ஏந்தி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் இராணுவக் கட்டமைப்பின் அபிவிருத்திக்காகவும் பலத்திற்காகவும் இன்னும் சாதாரணமாகச் குறிப்பிடுவதானால் தலைவர் பிரபாகரன் அவர்களின் எண்ணத்தின் படி போராளிகள் நல்ல சத்தான உணவுகளை உண்டு சுகதேகிகளாகவும் போராடக் கூடிய வலிமை பெற்றவர்களாகவும் இருப்பதற்காகவும், இன்னும் பல நிர்வாகத் தேவைகள் புலனாய்வுத் தேவைகள் ஆகியவற்றுக்காகவும், விடுதலை சார்ந்த கலை இலக்கியத் படைப்புக்களின் பரவலாக்கல் முயற்சிகளுக்கும் இயக்கத்தின் பிரச்சார திட்டங்களுக்கும், இராணுவத்தினரோடு போரிடுகின்றபோது காயமடைகின்ற அல்லது ஊனமடைகின்ற போராளிகளி;ன் நலன்களுக்காகவும் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் சேகரிக்கபபட்ட பாரிய நிதி 2009 ஆண்டுக்கு பின்னர் பலரால் முடக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் உலகெங்கும்…

Read More

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசின் செயலின்மை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசின் செயலின்மை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, தீவிர வறட்சி நிலைமை, கடினமான வாழ்வாதார நிலை போன்றவை குறித்து தமிழக அரசின் செயலின்மை மற்றும் மவுனம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ‘மனிதார்த்த கரிசனைகள்’ இன்றி தமிழக அரசு உள்ளது என்று கவலை வெளியிட்டார். விவசாயிகளைக் காப்பது மாநில அரசுகளின் கடமை இவர்களில் பலர் கடந்த 31 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர், என்றார் அவர். மேலும், தமிழக அரசு இதில் காட்டும் மெத்தனப் போக்கும் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டுமே தவிர எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசின் உதவியை…

Read More
1 359 360 361 362 363 425