ராடன் நிறுவனத்தில் நடந்த சோதனையை அடுத்து ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்

ராடன் நிறுவனத்தில் நடந்த சோதனையை அடுத்து ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்

நடிகை ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று(செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தியதை அடுத்து, அவருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகம், அதிமுக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம்…

Read More

என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியை டெல்லி அணி வீழ்த்தக் காரணமாயிருந்தது சஞ்சு சாம்சனின் அதிரடி சதம். இந்த முக்கியமான சதம் அடித்த நாள் தன் வாழ்நாளின் சிறப்பான நாள் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் 62 பந்துகளில் சதம் கண்டு 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசி 19-வது ஓவர் 2-வது பந்தில்தான் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் கிறிஸ் மோரிஸ் 38 ரன்கள் விளாசித் தள்ள கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் பின்னி எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205…

Read More

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடி; கட்சிகளுக்கு ஆதரவளித்த சுயேச்சைகள் மீது நடவடிக்கை

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடி; கட்சிகளுக்கு ஆதரவளித்த சுயேச்சைகள் மீது நடவடிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக் காக ரூ.1 கோடியே 10 லட்சம் வரை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரி வித்த சுயேச்சைகள் மீது நட வடிக்கை எடுக்கவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடப்பதாக இருந்தது. இந்நிலையில், பணப் பட்டுவாடா புகார்கள் அடிப்படை யில் தேர்தலை நேற்று முன்தினம் நள்ளிரவில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தற்போதைய சூழலில் உடனடியாக தேர் தலை நடத்த ஆணையம் தயா ராக இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் படி,…

Read More

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்

‘‘ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்கு பணம் எதையும் பெறவில்லை. அமைச்சர் கொடுத் தனுப்பிய ரூ.5 லட்சம், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தங்கிய ஹோட்டல் கட்டணம்தான்’’ என்று சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி தெரிவித் தார். மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தஞ்சாவூர், அரவக் குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதிமுக வேட்பாளர்களின் படிவம் -ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்கு பதிலாக அவரு டைய பெருவிரல் ரேகை (கை நாட்டு) பதிவு செய்யப் பட்டிருந்தது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், பெரும் பரபரப்…

Read More

நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் மீண்டும் வருமான வரிசோதனை

நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் மீண்டும் வருமான வரிசோதனை

ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த் 7 ந்தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்  வீடுகள்,  அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நடிகர் சரத்குமாருக்கு சம்மன் அனுப்பபட்டு…

Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலைநிறுத்த தான் -ஓபிஎஸ் அணி

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலைநிறுத்த தான் -ஓபிஎஸ் அணி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆர்.கே.நகர்த் தொகுதியில் நாங்கள் பணம் கொடுத்ததாக ஜி.ராமகிருஷ்ணன் கூறுவது உண்மைக்கு புறம்பானது. பணப்பட்டுவாடா செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு பொய்யானது இதனை கண்டிக்கின்றோம் பணம் கொடுத்ததாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியது. டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்தார் என்பது உலகமறியும்.ஆர்.கே.நகர்த்தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான். வருமான வரித்துறை ஆவணத்தில் உள்ள 89 கோடி ரூபாய்…

Read More

ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், இதற்கு உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இது வரை தமக்குரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என போராட்டத்தில் ,ஈடுபட்டுள்ள விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்

46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமது போராட்டம் நியாயமானதெனவும், இதற்குரிய, சாதகமான தீர்வு கிடைக்கப்பெறும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பதியாதவர்கள், விபரங்களை விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெயவனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

கொழும்பு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்தார். ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவ் அமைப்பினைச் சேர்ந்த ஹேமமாலி அபேரத்ன மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”தமது உறவுகளை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு முகங்கெடுக்கும் இம் மக்களின் பிரச்சினைகளை…

Read More

ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! ஹர்ஷ டி சில்வா

ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! ஹர்ஷ டி சில்வா

போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு ஐ.நாவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இன்று ஜனநாயகம் அமைந்துள்ளது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே இன்று இலங்கைக் குடிமக்கள் நடத்தப்படுகின்றனர். இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் அவதானித்து வருவதால் அவை…

Read More
1 361 362 363 364 365 425