தமிழக அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

தமிழக அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது.சரக்குகள் தேக்கம் இந்த போராட்டம் காரணமாக லாரிகள் ஓடாததால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சரக்கு போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read More

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார். இந்நிலையில், சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த இன்று (திங்கள்கிழமை)…

Read More

டெல்லியில் 21 ஆம் நாள் விவசாயிகள் போராட்டம்: தம்பிதுரை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

டெல்லியில் 21 ஆம் நாள் விவசாயிகள் போராட்டம்: தம்பிதுரை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

டெல்லியில் 21 ஆம் நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் இன்று தொடர்கிறது. இவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு மக்களவை துணைசபாநாயகர் எம்.தம்பிதுரை மூன்றாவது முறையாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினரால் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் 13 ஆம் தேதி துவங்கிய போராட்டம் முடிந்தபாடில்லை. இதில், வங்கிக்கடன் ரத்து, கூடுதல் வறட்சி நிவாரணநிதி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலறும் ஆதரவளித்து வருகின்றனர். இவர்களை இன்று மூன்றாவது முறையாக தமிழக அரசு…

Read More

மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: டேங்கர் லாரிகளும் நாளை முதல் ஸ்டிரைக்

மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: டேங்கர் லாரிகளும் நாளை முதல் ஸ்டிரைக்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் சமையல் எரிவாயு லாரி உரிமை யாளர்கள் 3-ம் தேதி (நாளை) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் தெரிவித்தார். டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்து வதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால், மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், சேலத்தில்…

Read More

பிரித்தானியாவில் மீண்டும் அமுலுக்கு வரும் நீல வண்ண கடவுச்சீட்டு

பிரித்தானியாவில் மீண்டும் அமுலுக்கு வரும் நீல வண்ண கடவுச்சீட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. பிரித்தானியாவில் புதிய வடிவமைப்புடன் மேலதிக பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டுகளை வரும் 2019 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு கொண்டுவர உள்விவகாரத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் Burgundy நிற கடவுச்சீட்டை உரிய அலுவகங்களில் ஒப்படைத்து புதிய நீல வண்ண கடவுச்சீட்டை குடிமக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள Burgundy நிற கடவுச்சீட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சின்னத்தை மாற்ற வலியுறுத்தி ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து குறித்த நீல வண்ன கடவுச்சீட்டு தயாரிப்பு செலவினங்களுக்காக 500…

Read More

மெரீனாவில் மீண்டும் புரட்சி வெடிக்கும்: நடிகர் ராகவா லாரன்ஸ்

மெரீனாவில் மீண்டும் புரட்சி வெடிக்கும்: நடிகர் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கான மெரீனா போராட்டம் என்னால் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. உங்களுடன் நான் இருந்ததால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றது. நான் இத்துடன் நின்றுவிடவில்லை. விவசாயிகளுக்கான போராட்டத்தை 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டேன். தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் நலனுக்காக நான் ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். “விவசாயிகள் உயிர் காப்போம். சொல்லாதே செய்’ என்ற பெயரில் அந்தத் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளேன். இதற்கான இணையதளமும் தொடங்கப்படும். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் விவசாயிகளுக்காக உதவி செய்யுங்கள். உங்களால் முடிந்த தொகையை அந்தத் திட்டத்துக்குக் கொடுங்கள். ஒரு மாணவர் ஒரு ரூபாய் கொடுத்தால்கூட போதும்….

Read More

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. டெல்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வலியுறுத்தினார் என்பது அடிப்படை வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் புகார். இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி மேக்சிஸ் நிறுவனமானது இந்திய…

Read More

UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

         உதயன் சர்வதேச விருது விழா- 2017   மாகாண அரசின் அமைச்சர்கள், மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் என மண்டபம் நிறைந்தவர்களின் முன்னிலையில் அழகுற நடந்தேறிய உதயன் சர்வதேச விருது விழா-2017 கடந்த 12 வருடங்களாக கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்று வரும் உதயன் சர்வதேச விருது விழாவில இதுவரை 70க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் கனடா மற்றும் இந்தியா இலங்கை இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்தும் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். உதயன் விருது விழாவில் உதயன் சமூக நல்லுறவு விருது, உதயன் கலை இலக்கிய மேன்மை விருது, உதயன் தலைமைத்துவ விருது, உதயன்…

Read More

இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

          எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2ம் திகதி மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவிலும் இகுருவி நிறுவனம் நடத்தவுள்ள கல்வி ◌தொடர்பான கருத்தரங்கிலும் பங்குபற்ற யாழ்ப்பாண மண்ணிலிருந்து தொடர்ச்சியாக பல ஆண்டுகள் (யுத்த காலத்தைய கொடுமைகளைச் சந்தித்தும் சமாளித்தும்…….}கல்விப் பணி ஆற்றுகின்ற ஆசான் குணசீலன் அவர்கள் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் தனது துணைவியார் சகிதம் வந்திறங்கினார். அவரை வரவேற்கச் சென்ற நண்பர்கள் ஆசானின் முன்னாள் மாணவர்கள் (இந்நாள் கனடா வாசிகள்), மற்றும ஊடக நண்பர்கள் வர்த்தக நண்பர்கள் மற்றும் இகுருவி குழாம் ஆகியோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ஆசான் குணசீலன் அவர்கள் யாழ்ப்பாணத்தில்…

Read More

தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேற்கண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் (‘ஸ்டிரைக்’) ஈடுபடப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது, இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சரக்குகள்…

Read More
1 366 367 368 369 370 425