ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு  செய்து வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. ‘அம்மா டி.வி.’ என்ற பெயரில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டி.வி. தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான இடம் நுங்கம்பாக்கத்தில்  தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த அணியின் மூத்த தலைவர் ஒருவர்…

Read More

நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்

நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்

இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார். இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்…

Read More

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் இரு தரப்பின் செயல்பாடுகள் தனக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிபதி தெரிவித்தார். மேலூர் அருகே மலம்பட் டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பது தொடர்பாக…

Read More

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் இளைஞர்கள் கைது

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் இளைஞர்கள் கைது

சென்னை மெரினாவில் இளைஞர்கள் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவினர். தடையை மீறி போராடிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். மெரினா கடற்கரையில் மதியம் 1.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளுடன் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை கடற்கரைக்கு அழைத்துவரும் முடற்சியில் ஈடுபட்டனர். சில இளைஞர்களை போலீஸார் கைது செய்த நிலையில் 5 மாணவர்கள் மட்டும் கடலில் இறங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸாரும் கடலில் இறங்கிச் சென்று அந்த மாணவர்களை அழைத்து வந்தனர். மாணவர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர். எங்கள் உயிர் பெரிதல்ல: “டெல்லியில் போராட்டம் நடத்தும்…

Read More

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகள் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மாறி, மாறி புகார்

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகள் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மாறி, மாறி புகார்

இரட்டை மின் விளக்கையும், தொப்பி சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமி‌ஷன் தற்காலிகமாக முடக்கியது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘இரட்டை மின் விளக்கு’ என்ற சின்னத்தையும், சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘தொப்பி’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் இ.மதுசூதனன் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் ‘தொப்பி’ சின்னத்திலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்தந்த சின்னத்துக்கு ஆதரவாக அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள் திரட்டி வருகின்றனர்….

Read More

நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான்.

நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே திடீரென மாயமாகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டதால் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.  இந்த மனு மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அவர்கள் சொல்லும் தகவல்கள் பொய்யானவை. எனவே அந்த வழக்கை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கு விசாரணையின்போது தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய, அவரது பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த…

Read More

சிறையில் சசிகலாவை சந்தித்த முதல்வர், 4 அமைச்சர்களை தகுதியிழப்பு கோரி வழக்கு

சிறையில் சசிகலாவை சந்தித்த முதல்வர், 4 அமைச்சர்களை தகுதியிழப்பு கோரி வழக்கு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிப் புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி யின் மகன் டி.ஆணழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறை வால் மருத்துவனையில் சேர்க்கப் பட்டு கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரா னார். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதும், அவரை முதல் வராக்கும் நோக்கத்துடன் பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாகக்…

Read More

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் – ஓ. பன்னீர்செல்வம்

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் – ஓ. பன்னீர்செல்வம்

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார் மதுசூதனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஓ.பன்னீர் செல்வம் அனியின் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் வேட்பாளர் இரட்டை மின்கம்பம் சின்னத்தை  இரட்டை இலையாக்கிவிட்டனர் என தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர் செல்வம்.தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார். எங்கள் வெற்றி வேட்பாளர் மதுசூதனன் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்என கூறினார்.

Read More

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபாவுக்கு படகு சின்னம் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சிகள் அனைத்தும் தீவிர பிர சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் எம்.ஜி.ஆர்- அம்மா-தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இதுவரை பிரசா ரத்தில் இறங்கவில்லை.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபாவுக்கு படகு சின்னம் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சிகள் அனைத்தும் தீவிர பிர சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் எம்.ஜி.ஆர்- அம்மா-தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இதுவரை பிரசா ரத்தில் இறங்கவில்லை.

சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தீபா 3 சின்னங்களை விரும்பி கேட்டுள்ளார். ஒன்று திராட்சை கொத்து. இந்த சின்னத்தை விரும்ப காரணம் இரட்டை இலைகளுடன் திராட்சை தொங்குவது போல் இருக்கும். அது ஜெயலலிதாவின் இரட்டை இலையை நினைவுபடுத்தும் என்று கருதுகிறார்.அடுத்தது பேனா. தீபா ஜெயலலிதாவின் சொத்துக்கள் எதுவும் வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனா மட்டுமே போதும் என்று கூறி வருகிறார். அதை நினைவுபடுத்தும் வகையில் பேனா மீது ஆர்வம் காட்டுகிறார். அடுத்தது படகு. இந்த சின்னத்தை விரும்ப காரணம் ஆர்.கே.நகர் மீனவர்கள் நிறைந்த பகுதி. தீபாவின் தந்தையும் இறால் ஏற்றுமதி தொழில் செய்தவர். எனவே படகு மீது ஆர்வம் காட்டுகிறார்….

Read More

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி – வைகோ சந்திப்பு: தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்தார்

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி – வைகோ சந்திப்பு: தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்தார்

2017 மார்ச் 26 இரவு 9 மணி அளவில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். இது தொடர்பாக இன்று வெளியான அறிக்கை வருமாறு: முக்கியமான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் 13 ஆவது நாளக, டெல்லி ஜந்தர் மந்தரில் கட்சி சார்பு அற்ற முறையில் தமிழக விவசாயிகள்நடத்தி வருகின்ற அறப்போராட்டத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். “‘இந்தியாவின் தந்தை’ எனப் போற்றப்படும் உத்தமர் காந்தி அடிகள் இடுப்பில் அரை ஆடையே அணிந்தார். அதனால் அவரை ஒரு ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். காந்தி அடிகளின் வழியில், தமிழக விவசாயிகள் இடுப்பில் மட்டுமே அரை ஆடை…

Read More
1 368 369 370 371 372 425