இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்

இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்

இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர் என்றும், மற்றொரு விளக்கு ஜெயலலிதா எனவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் புது விளக்கம் கொடுத்தார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கான பூமிபூஜை, பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தலைமை தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான பந்தக்கால் நட்டார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எங்களது தேர்தல் சின்னம், மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எங்களது சின்னமான இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இரண்டு விளக்குகளும் ஒளி விளக்காக மாறி இடைத்தேர்தலில்…

Read More

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா

நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருது விழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட் விருந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் நிகழ்வில் பல பன்முகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்  இந்த நிகழ்வின் நேரடி ஒலிப்பரப்பின் ஒலிப்பதிகளை இப்பொழுது நீங்களும் இங்கு பார்வையிடலாம் ! நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்றகனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட்…

Read More

ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது

ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது

சென்னை: ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது செய்து விசாரித்து ஏப்ரல் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி பலரும் குற்றம் சாட்டி வருகின்றன. ஜெயலலிதா மரணத்தில் குழப்பம் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகன் என்றும் தன்னை தத்து கொடுத்து விட்டதாகவும் பத்திரங்களுடன் வந்து புகார் அளித்தார். இதற்கு அப்போதே நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இப்போது கிருஷ்ணமூர்த்தி போலியான நபர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்…

Read More

ரஜினி இலங்கை வந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!

ரஜினி இலங்கை வந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!

கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்திருந்தால், தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்’ என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணிமுத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று, வீடுகளை வழங்க இருந்தார். ஆனால் ‘ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து பேசி வந்தனர். ரஜினியுடன் போனிலும் பேசி, இலங்கை போக வேண்டாம் என்று கூறியதால் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார். இது தொடர்பாக…

Read More

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி  சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில்,  எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல்துறை ஆணையராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.  இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜார்ஜ் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றிருந்தார்.

Read More

அருண்ஜேட்லியுடன் விஷால், பிரகாஷ்ராஜ் சந்திப்பு: விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தல்

அருண்ஜேட்லியுடன் விஷால், பிரகாஷ்ராஜ் சந்திப்பு: விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தல்

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்தனர். அப்போது, டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் வறட்சி மற்றும் விவசாயக்கடன் உட்படப் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பிரகாஷ்ராஜ், நடிகர் ரமணா, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டியராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தனர். ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட…

Read More

நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம்’ பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் பேட்டி

நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம்’ பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் பேட்டி

ரஜினிகாந்த் முடிவு இடைவேளை தான். என்னை ஆதரித்து நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம் செய்வார்கள் என்று பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் கூறினார். வாக்குசேகரிப்பு ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் தண்டையார்பேட்டையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் பணிமனை அருகே நேற்று காலை மாநகர பஸ்சில் சென்ற பயணிகள், பஸ்நிலையத்தில் நின்ற பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஒழுங்குபடுத்தப்படும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை…

Read More

இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி வேண்டுகோள்

இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி வேண்டுகோள்

நான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளை கட்டியுள்ளார். சுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள…

Read More

இந்த வார (24/03/2017) இ-பேப்பர்

இந்த வார (24/03/2017) இ-பேப்பர்

இந்த வார (24/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக சார்பாக போட்டியிடும் கங்கை அமரன், அன்று ரஜினியைச் சந்தித்ததையடுத்து கங்கை அமரனை ரஜினி ஆதரிப்பார் என்ற பரவலான எதிர்பார்ப்பு எழுந்தது. கங்கை அமரனும் ரஜினி தனக்கு ஆதரவளிப்பார் என்பது போல் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி அறிவித்துள்ளார்.

Read More
1 369 370 371 372 373 425