சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஓ.பி.எஸ் அணியிலுள்ள 12 எம்எல்ஏக்களும் தீர்மானத்தை ஆதரிக்காததாலும், ஆளுங்கட்சிக்கு 122 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதாலும், தீர்மானம் தோல்வியில் முடிந்தது. சபாநாயகர் தனபாலை அப்பதவியிலிருந்து நீக்ககோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) முன்மொழிந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன. அமளியான சட்டப்பேரவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி…

Read More

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவி கண்டுபிடிப்பு: ஓசூர் மாணவருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவி கண்டுபிடிப்பு: ஓசூர் மாணவருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

ஓசூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு ‘ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருது வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவுரவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ்(15). இவர், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவரின் சாதனையை பாராட்டி கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில், ‘ராஷ்டிரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்துள்ளார். இதுகுறித்து ஓசூரில் மாணவர் ஆகாஷ் மனோஜ்…

Read More

சசிகலா அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்கள்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சசிகலா அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்கள்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா தரப்பு ஆட்டோ, பேட் மற்றும் தொப்பி ஆகிய சின்னங்களைத் தெரிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் சசி அணிக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் ஆட்டோ சின்னம் வேண்டாம் என்று சசி தரப்பினர் கோரியதையடுத்து தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அதிமுக அம்மா என்று கட்சிப்பெயர் வேண்டுமெனவும் சசி தரப்பினர் சமர்ப்பித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணி அம்மா அதிமுக என்ற கட்சிப்பெயரை சமர்ப்பித்தது, ஆனால் தேர்தல் ஆணையம் பெயரை மாற்றுமாறு அறிவுறுத்த அதிமுக புரட்சித் தலைவி…

Read More

புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

தங்கர் பச்சான் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுங்காலமாகவே ஏதாவதொரு பெயரில் இயக்கம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என என்மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண் டவர்களும் கேட்டுக்கொண்டே இருந் தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை; அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என இதுவரை மறுத்து வந்தேன். தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூறையாடியவர்களின் எண்ணிக் கையை விடவும் சூறையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்குரிமையை சரியாக பயன்…

Read More

உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறியதற்காக கர்நாடக முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்திற்கு ஜூலை 11ஆம் தேதிவரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஆனால், கடந்த 2016 டிசம்பர் 15, 2017 ஜனவரி 4 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் இதைப்போல தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த மூன்று தடவையும் உத்தரவை நிறைவேற்ற…

Read More

கட்சியையும் ஆட்சியையும் தன்வசம் வைத்திருக்கும் சசிகலா தரப்புக்கே இரட்டை இலை சின்னம்: இரட்டை இலையை அடையாளம் காட்டிய திண்டுக்கல் மாயத்தேவர் கருத்து

கட்சியையும் ஆட்சியையும் தன்வசம் வைத்திருக்கும் சசிகலா தரப்புக்கே இரட்டை இலை சின்னம்: இரட்டை இலையை அடையாளம் காட்டிய திண்டுக்கல் மாயத்தேவர் கருத்து

இரட்டை சிலை சின்னம் சசிகலா அணிக்கா, ஓ.பி.எஸ்., அணிக்கா என்பது குறித்து இன்று டெல்லியில் இரு தரப்பையும் அழைத்து இறுதி விசாரணை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்த நிலையில், இரட்டை இலை அதிமுக-வின் வெற்றிச் சின்னமாக வந்த விதம் குறித்து பேசினார் 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக-வின் முதல் வேட்பாளரும் வழக்கறிஞருமான மாயத்தேவர். ‘‘1973- திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் களத்தில் புதிய கட்சி என் பதால் வேட்பாளரான என்னிடம் ஏணி, விளக்கு உள்ளிட்ட பதினாறு சின்னங்களை காட்டி ‘இதில் ஒன்றை உங்களது சின்ன மாக தேர்வு செய்யுங்கள்’ என்றார்கள். நன்கு யோசித்துவிட்டு, நான்தான் இரட்டை இலையைத்…

Read More

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகையின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த்….

Read More

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்குகாலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியாஆதரவுஅளிக்க கூடாது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்குகாலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியாஆதரவுஅளிக்க கூடாது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியாஆதரவு அளிக்க கூடாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சென்னையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கானதும் நீதிக்குமான போராட்டம் குறித்த சமகால நிலைவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றது. இணைய வழி காணொளிப் பரிவர்த்னை வழியே நியுயோர்க்கில் இருந்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு சிறிய மண்டபம் ஒன்றில் காத்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.. “ஐ.நா தீர்மானம் முன்மொழிந்த காரியங்களை கடந்த 18 மாதகாலத்தில் நிறைவேற்றுவதாக ஒத்துக் கொண்ட இலங்கை அரசாங்கம், எதனையும்…

Read More

சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் 27-ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் 27-ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நிலுவை வழக்குகள் குறித்த விவரங்களை தாமதமாக தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வரும் 27-ம் தேதி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஆஜராகாவிட்டால் பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஜாமீன் மனு மீதான விசார ணையின்போது, நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2011 வரை நிலுவையில் உள்ள வழக்கு களின் தற்போதைய நிலை, இதில் எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜுக்கு…

Read More

நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்: அங்க அடையாளம் லேசர் சிகிச்சையில் அழிப்பு?

நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்: அங்க அடையாளம் லேசர் சிகிச்சையில் அழிப்பு?

உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கலான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூர் தம்பதி தொடுத்த வழக்கு தொடர்பாக உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மருத்துவ அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அங்க அடையாளம் ஒன்று லேசர் சிகிச்சையில் அழிக்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்புச் செலவு வழங்க நடிகர் தனுஷுக்கு உத்தரவிடக்கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்…

Read More
1 370 371 372 373 374 425