மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………

மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம் போன்ற ஏனைய பகுதிகளிலும் அங்கங்களை இழந்தும் ,உடலெங்கும் “செல்” உலோகத் துண்டுகளைத் தாங்கிய வண்ணமும் வாழ்ந்துவரும் முன்னாள் போராளிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் துயரங்களோடு வாழ்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் “லங்காஸ்ரீ” செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மிகவும் உருக்கமாக பல விடங்களை பகிர்ந்துள்ளார்கள். மேற்படி பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ள விபரங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவிகளுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றோம். வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் தாயகத்தில் துன்பத்தில் வாடும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துங்கள் என்ற எண்ணத்தோடு அனுப்பிவைக்கும்…

Read More

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றைஅமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றைஅமைப்பதற்கானஅடிக்கல்  நாட்டும் நிகழ்வு

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன் கிழமை பகல் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர். யுத்த நிறைவடைந்த பின்னர் உடைக்கப் பட்டிருந்த கிளிநொச்சி–கனகபுரம் மாவீரர்  துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் இந்த கல்லறை அமைக்கும் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில், அங்குதுப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More

பிக்கரிங் மாநகரில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம்

பிக்கரிங் மாநகரில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம்

கடந்த பலவருடங்களாக  கனடாவில் பொதுச் சேவையில் இயங்கிவரும் டுறம் பிரதேச தமிழ் கலாச்சாரஅறிவியல் சங்கம் நடத்தியதமிழ் மரபுத் திங்கள் கொடியேற்றும் வைபவம், நேற்று முன்திகம் பிக்கரிங் மாநகரில் சிறப்பாகநடைபெற்றது. மேற்படி வைபவம் கனடிய அரசு நேற்று நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட வைபவமாக நடைபெற்றமை எமது தமிழர் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றே கருதவேண்டும். மேற்படி வைபவம் வெற்றிகரமாக நடைபெறடுறம் பிரதேச தமிழ் கலாச்சார அறிவியல் சங்கத்தின் தலைவர்  திரு ரொம் திருக்குமார் தனது சக உறுப்பினர்களோடுஅனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட்  5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில்  நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் செயலாளர் நாயகம்” தமிழச் செம்மல்” ஜேர்மனிவாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் துரித முயற்சியாலும் அபாரமான துணிச்சலாலும் யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக  பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாகநடைபெறவுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இராமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி 13வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் வடக்கு மாகாணமுதலமைச்சர் மாண்புமிகு சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

Read More

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க கொழும்பில் நடத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்கு, ஒரு மில்லியன் சீனர்கள் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, “இலங்கை அரசாங்கத்துக்கு அத்தகைய கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில், சீனர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான நிபந்தனைகள் ஏதும் இல்லை. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இது ஒரு தேசிய செயற்பாடு ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

சவால்களை சந்திக்க தமன்னா ரெடி!

சவால்களை சந்திக்க தமன்னா ரெடி!

‘இரண்டாவது ரவுண்டில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுப்பார்’ என, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் தமன்னா. தமிழிலும், தெலுங்கிலும், தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்வரை, நடித்தோமா, துட்டு வாங்கினோமா, வீட்டுக்கு போனோமா என, அமைதியாக இருந்த இவர், தற்போது, பெண்ணுரிமை, கனவு, லட்சியம் என, பல்வேறு விஷயங்களை பேசுகிறார். சமீபத்தில் கூட, நடிகையரை பற்றி விமர்சித்த இயக்குனரை, காய்ச்சி எடுத்தார். ‘சவால்களை பார்த்து பயந்து ஓட மாட்டேன். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்; அதை துணிச்சலுடன் எதிர்கொள்வேன்’ என, டுவிட்டரில், அவர் பதிவிடும் கருத்துக்களை பார்த்து, கோடம்பாக்கமே மிரண்டு போயிருக்கிறது.

Read More

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களையும் கொண்டுள்ள தோனி,  நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய ஒருநாள் மற்றும்  20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், கேப்டனாகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்,  தோனியின் முடிவு திடீரென…

Read More

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு

எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். “ தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அதேவேளை, சீனா, இந்தியாவுடனான உறவுகளை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்ற அடிப்படையில் தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்குமே தவிர, வெளிநாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடி பணிந்து முடிவுகள் எடுக்கப்படாது. இந்த நாடு எமது மக்களால், எமது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. சிறிலங்காவின் இறைமையை அரசாங்கம் பாதுகாக்கும். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையினால், எல்லா நாடுகளுடனும் சுமுகமான…

Read More

ரஜினி, அஜித்தை முந்திய ‘பைரவா’ விஜய்யின் சாதனை

ரஜினி, அஜித்தை முந்திய ‘பைரவா’ விஜய்யின் சாதனை

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலக அளவிலும் ‘பைரவா’ டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்தியத் திரைப்பட டிரைலரும் இரண்டு நாட்களுக்குள் 50 லட்சம் பார்வைகள், 2 லட்சம் லைக்குகள் என யு டியூபில் பெற்றதே இல்லை. ‘பைரவா’ படம் முதல் முறையாக இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது. ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள்தான் யு டியூபில் அதிக சாதனை படைக்கும் என அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், ‘தெறி’ படத்தின் மூலமே இணையதளப் போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என விஜய் ரசிகர்கள் நிரூபித்தார்கள். ‘பைரவா’ படத்தின் டீசர் வெளிவந்து…

Read More

தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழகத்துக்கு பேரிடியாகும். டெல்லி: விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்கள் மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது….

Read More
1 398 399 400 401 402 425