ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மிக்க நலனுடன் இருக்கிறார்,விரைவில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆரம்பநிலையில் அவருக்கு காய்ச்சல்,நீர்ச்சத்து குறைபாடு எனக் கூறப்பட்டபோதும் பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டும் எய்ம்ஸ் மருத்துவர்கள்,சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறும்போது,”முதல்வர் ஜெயலலிதா…

Read More

இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசை தமிழகம் வலியுறுத்த வேண்டும்: வாசன்

இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசை தமிழகம் வலியுறுத்த வேண்டும்: வாசன்

தமிழக அரசு இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,”இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 21 ஆம் தேதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்களை இலங்கை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இது மிகவும் அதிர்ச்சிக்குரியது,வேதனையளிக்கிறது. இந்த கொடூரச் செயல்புரிந்த இலங்கை காவல்துறையினரை தமாகா வன்மையாகக் கண்டிக்கிறது. யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்ற அந்த இரண்டு மாணவர்களையும் துப்பாக்கியால் சுட்டதை மறைப்பதற்கு அந்த மாணவர்கள் சாலை விபத்தில் இறந்ததாக இலங்கை அரசு கூறியது. அதன் பிறகு இலங்கை அரசு – அந்த மாணவர்கள் சைக்கிளை நிறுத்தாமல்…

Read More

பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் தவிர்க்க கமல் வேண்டுகோள்

பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் தவிர்க்க கமல் வேண்டுகோள்

முதல்வர் உடல்நிலைக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,தன் பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல் இன்று ட்விட்டரில் கூறுகையில்,”நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க,என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் தன் பிறந்த நாளான நவம்பர் மாதம் 7-ம் தேதி அன்று நற்பணி இயக்கத் தோழர்கள் எந்த விழாவும் கொண்டாட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Read More

நடிகர்கள் சங்க நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு – செலவு கணக்குகள் இணையதளத்தில் வெளியீடு

நடிகர்கள் சங்க நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு – செலவு கணக்குகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி–சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால்,துணைத்தலைவர்கள் பொன்வண்ணன்,கருணாஸ்,நடிகர் ராஜ்கிரண் மற்றும் மூத்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது நட்சத்திர கிரிக்கெட்டில் ரூ.6 கோடி ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். வரவு,செலவு அனைத்துக்கும் நாங்கள் முறையாக கணக்கு வைத்து இருக்கிறோம். நடிகர் சங்க நிலம் சார்ந்த அனைத்து வில்லங்கத்தையும் தீர்த்து இருக்கிறோம். கடன்களை அடைத்து இருக்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் எவ்வளவு வருமானம் வந்தது. எவ்வளவு…

Read More

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க 4-வது முறையாக சென்னை வந்தார் லண்டன் மருத்துவர்

முதல்வருக்கு சிகிச்சை அளிக்க 4-வது முறையாக சென்னை வந்தார் லண்டன் மருத்துவர்

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே 4-வது முறையாக சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் அப் போலோவுக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தனர். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி அப் போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை மருத்துவர்கள் அப்போலோ மருத்துவக் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் லண்டன்,எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோ சனைப்படி சிங்கப்பூர் மவுன்ட் எலிச பெத் மருத்துவமனையில்…

Read More

தமிழகத்தில் முழுநேர ஆளுநராகிறார் வித்யாசாகர் ராவ்? – விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

தமிழகத்தில் முழுநேர ஆளுநராகிறார் வித்யாசாகர் ராவ்? – விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்,தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்கப் படலாம் என தெரிகிறது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநராக பலரது பெயர் அடிப்பட்டாலும்,புதியவர் நியமிக்கப்படும்வரை,மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கூடுதல் பொறுப்பாக தமிழகம் வழங்கப்பட்டது. அவர் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார். தற்போது இவரையே தமிழகத் துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக,குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேல் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. அதன் பின் தமிழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜ மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தியை…

Read More

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….

Read More

3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

அரவக்குறிச்சி,தஞ்சை,திருப்ப ரங்குன்றம் தொகுதிகளில் பண விநியோகத்தை தடுத்து,அமை தியான முறையில் தேர்தலை நடத் துவது தொடர்பாக,டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடந்தது. இதில்,வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டதன் காரண மாகவும்,வருமான வரித்துறை சோதனையில் பணம் அதிகளவில் பிடிபட்டதாலும்,அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த முடி யாது என்ற காரணத்தை தெரிவித்து தேர்தலை ரத்து செய்தது. தொடர்ந்து,232 தொகுதிகளுக் கும் தேர்தல் நடந்து முடிந்த து. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திருப்பரங்குன்றம் தொகுதியில்…

Read More

4 வாரங்களுக்குப் பிறகு ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்: நலமாக இருப்பதாக தகவல்- முதல்வருக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம்

4 வாரங்களுக்குப் பிறகு ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்: நலமாக இருப்பதாக தகவல்- முதல்வருக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம் செய்ததால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக படுக்கையில் இருந்த முதல்வர்,எழுந்து உட்கார்ந்து முழு நினைவோடு இருப்பதுடன்,சைகை மூலமாகவும் பேசி வருகிறார். இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டன் சிறப்பு மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி,அஞ்சன் டிரிக்கா,நிதீஷ் நாயக் ஆகியோரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வருக்கு அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு அளித்து வரும் சிகிச்சையை தொடர்வதற்கு அவர்கள் அனுமதித்தனர். தற்போது சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு பெண் மருத்துவர் கள் அப்போலோ மருத்துவமனை பிசியோதெரபி நிபுணர்களுடன்…

Read More

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) அப்போலோ மருத்துவமனை வந்தார். முன்னதாக அவர் அக்டோபர் 1-ம் தேதி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் நலனை விசாரித்துச் சென்றார். தற்போது 2-வது முறையாக அவர் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அரை மணி நேரம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி மருத்துவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா,கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை…

Read More
1 414 415 416 417 418 425