கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

கருணாநிதியிடம் மோடி நேரில் நலம் விசாரித்தார்

சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இல்ல திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். இதற்கிடையில் , சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி விரும்பினார். இதனையடுத்து அவர் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , கனிமொழி, முன்னாள் அமைச்சர் துரை முருகன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து…

Read More

மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: எப்போது கேட்டாலும், எதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்தைவிட நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:…

Read More

உயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்

உயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மழைக்காக, வறட்சியை தீர்க்க தண்ணீர் வராதா என்று ஏங்கினோம். இன்று மழை வந்தாலும் இது போன்ற துயரங்கள் இரண்டு குழந்தைகளை இழந்து வாடும் மீளா துயரம் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று கூறுகிறார்களே? தண்ணீர் தேங்கவில்லை என்பது எல்லா இடங்களிலும் இல்லை, வேலை நடந்துள்ளது. அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கவில்லை என்பது மட்டுமே தீர்வாகாது. இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல்…

Read More

வீணாகும் மழைநீர்; பொதுமக்கள் தாமாக முன் வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

வீணாகும் மழைநீர்; பொதுமக்கள் தாமாக முன் வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளிலும், குடியிருப்புகளையொட்டிய பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை: ‘‘எங்கெங்கு காணினும் தண்ணீரடா… ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லையே’’ என்ற ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது சென்னை மாநகரம் தான். வட கிழக்குப் பருவமழையின் தொடக்க நாளிலேயே சென்னை மாநகரம் மிதக்கும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தாலும் அதை நாம் பயனுள்ள வகையில் சேமிக்கத் தவறுவது வருத்தமளிக்கிறது. சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 200 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக…

Read More

மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் கீழடியில் அகழாய்வு: ஜனவரியில் தொடங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் கீழடியில் அகழாய்வு: ஜனவரியில் தொடங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

கீழடியில் மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் வருகிற ஜனவரியில் ஆய்வு நடத்தும் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் உடன் இருந்தார். அவர்களிடம் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், உதவி தொல்லியலாளர் வீரராகவன் ஆகியோர் ஆவணப்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கினர். அதற்குப்பின், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு சர்வதேச கவனம் பெற்றுள்ளது. கீழடியில் கடந்த மூன்றாண்டு காலம் நடந்த அகழாய்வில் 7,518…

Read More

அமெரிக்கா, லண்டன் போல் மழைநீர் வடிகாலுக்கு சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் வேலுமணி பேச்சால் வாக்குவாதம்

அமெரிக்கா, லண்டன் போல் மழைநீர் வடிகாலுக்கு சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் வேலுமணி பேச்சால் வாக்குவாதம்

சென்னையில் மழைநீர் வடிகால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்குமே மழைநீர் தேங்கவில்லை, அமெரிக்கா போன்று லண்டன் போன்று சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அமைச்சர் எஸ்.பி.வேலு பேசியதை அடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் வேலுமணி திணறினார். சென்னை மாநகராட்சியில் இன்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினார். ”தமிழக அரசு முதல்வர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் சென்னையில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை, ஒரு சில இடங்கள் அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எதுவுமே…

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மரணம் அடைந்தார். ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. தலைவர்கள் சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள். இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தார். சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி…

Read More

அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2-வது நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். நினைவிடம் மற்றும் தங்க கவசத்தில் ஜொலித்த முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் டிடிவி…

Read More

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இப்போதைய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது வலியுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர், கடந்த மாதம் (செப்டம்பர்) 25–ந் தேதி…

Read More

மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மயிலாடுதுறையில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படம் விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்….

Read More
1 127 128 129 130 131 181