நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்
நிலவேம்பு கசாயம் பற்றிய வதந்திகளை பரப்பும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நிலவேம்பு கசாயம் குறித்து ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அரசின் செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலைப் பரப்புவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில்…
Read More








